ஐஸ்வர்யாவை தேடி தனத்தின் வீட்டில் சண்டை போடும் கஸ்தூரி, அவர்களை தேடி அலையும் பிரசாந்த் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று, திருமணத்திற்கு தயாராகும் கண்ணன் ஜீவாவிடம் மாட்டிக்கொள்கிறார். அவரிடம் இருந்து தப்பித்து வர, தனத்தின் அண்ணி கஸ்தூரி தனத்தின் வீட்டிற்கு வந்து சண்டை போடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திருமணத்திற்கு தயார் செய்ய கண்ணன் ஆதாரங்களை எடுக்க வருகிறார். அப்போது ஜீவா அங்கே வர கண்ணன் என்ன செய்வதென்று தெரியாமல் முழிக்கிறார். ஜீவா கண்ணனிடம் பேசிவிட்டு அங்கிருந்து கிளம்ப, ஐஸ்வர்யாவின் சித்தி அவரை தேடி அலைகிறார். அப்போது அங்கே பிரசாந்த் வர ஐஸ்வர்யாவை காணவில்லை என சொல்கிறார். உடனே பிரசாந்த் நான் தான் பார்த்துக் கொள்ள சொன்னேன்ல என்று கூறிவிட்டு அங்கிருந்து தேட கிளம்புகிறார்.
தனம், கண்ணன் வரவில்லை என காத்திருக்கிறார். அப்போது ஐஸ்வர்யாவின் சித்தி கஸ்தூரி, மற்றும் தனத்தின் அண்ணன் தனத்தின் வீட்டிற்கு வருகிறார். ஐஸ்வர்யா எங்கே என்று கேட்க எதுவும் புரியாமல் உள்ளனர். தனத்தின் அண்ணி பயங்கரமாக கத்தி சண்டை போடுகிறார். கண்ணனை என்ன செய்கிறேன் என்று பாரு என மிரட்டுகிறார்.
பிரசாந்த் அனைத்து இடங்களிலும் தேடி அலைகிறார். ஆனால் கண்ணன், ஐஸ்வர்யா கிடைக்க வில்லை. கண்ணனுடைய போனை சுவிட்ச் ஆப் பண்ண அவனது நண்பர்கள் தெரிவிக்கின்றனர். வீட்டில் கண்ணனுக்கு போன் செய்ய சுவிட்ச் ஆப் என வருகிறது. தனத்தின் அண்ணி பயங்கரமாக கோபமடைந்து கத்துகிறார்.முல்லை மற்றும் மீனா கண்ணன் அப்படிப்பட்டவன் இல்லை என்று கூறுகின்றனர்.பிரசாந்த் எல்லா இடங்களிலும் ஐஸ்வர்யாவை தேடி அலைகிறான்.
இந்தியாவில் கொரோனா 3ம் அலை தாக்கம் அக்டோபரில் தீவிரம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
கண்ணனும், ஐஸ்வர்யாவும் நண்பர்களுடன் சேர்ந்து காரில் வேறு இடத்திற்கு செல்கின்றனர். அங்கே திருமணத்திற்கு தேவையான ஏற்பாடுகள் நடைபெறுகிறது. ஐஸ்வர்யாவின் சித்தி கஸ்தூரி, கண்ணன் தான் ஐஸ்வர்யாவை அழைத்துக் கொண்டு ஓடிவிட்டான் என அழுத்தமாக சொல்லுகிறார். பிரசாந்த் பைக்கில் எல்லா இடமும் தேடி அலைகிறான். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.
“பாரதி கண்ணம்மா” சீரியல் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!