கதிர் கடைக்கு கஸ்டமரை போக சொல்லும் தனம், கஸ்தூரிக்கு பேசியல் செய்த ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கதிர் கடைக்கு கஸ்டமரை போக சொல்லும் தனம், கஸ்தூரிக்கு பேசியல் செய்த ஐஸ்வர்யா - இன்றைய
கதிர் கடைக்கு கஸ்டமரை போக சொல்லும் தனம், கஸ்தூரிக்கு பேசியல் செய்த ஐஸ்வர்யா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கதிர் கடைக்கு கஸ்டமரை போக சொல்லும் தனம், கஸ்தூரிக்கு பேசியல் செய்த ஐஸ்வர்யா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி கடைக்கு கஸ்டமர் ஒருவர் வந்து மளிகை பொருள்கள் வாங்க வர அப்போது தனம் கதிர் கடை பற்றி சொல்கிறார். அதை பார்த்து மூர்த்தி அதிர்ச்சி அடைகிறார். பின் ஐஸ்வர்யா கஸ்தூரிக்கு பேசியல் செய்து விடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை இன்னைக்கு சமைத்தது எல்லாம் தீர்ந்துவிட்டதாக சொல்ல, மல்லி அதை பார்த்து இது ஒன்னும் பெரிய விஷயம் இல்லை என்பது போல பேசுகிறார். இது உங்க திறமையால் விற்கவில்லை என மல்லி பேச, முல்லை அப்பா இன்னைக்கு தான் நல்லபடியாக வியாபாரம் ஆகி இருக்கிறது. உனக்கு அது பிடிக்கவில்லையா என கேட்கிறார். ஆமாம் இன்னைக்கு ஒரு நாள் விற்றதற்கு பெரிசா பேசுறாங்க என சொல்ல, உனக்கு பிடிக்கவில்லை என்றால் கிளம்பி போ என சொல்கிறார். முல்லை இன்னைக்கு நிறைய சமைக்க இருக்கிறோம் எல்லாம் விற்க இருக்கிறது அதை பார்த்துவிட்டு போ என சொல்கிறார். பின் மல்லி சென்றுவிட முல்லை இன்னைக்கு விற்றுவிடும் என்ற நம்பிக்கை இருப்பதாக சொல்கிறார்.

மறுபக்கம் மூர்த்தி கடைக்கு வருகிறார். அவர் வேலைகளை செய்ய தனம் அவரை வேலை செய்ய விடாமல் இருக்கிறார். பதிலுக்கு ஜீவாவும் வேலை செய்ய வேண்டாம் என சொல்ல, ஒரு பொருளை கூட நான் தொட கூடாதா என மூர்த்தி கேட்கிறார். அப்போது மூர்த்தியை பார்க்க கஸ்டமர் ஒருவர் வருகிறார். அவர் வீட்டில் விசேஷம் இருப்பதாக சொல்ல, மளிகை பொருள்கள் வேண்டும் என சொல்கிறார். மூர்த்தி சரி என சொல்ல, தனம் கதிர் கடையில் சமையல் ஆர்டர் வந்தால் நன்றாக இருக்கும் என நினைக்கிறார். பின் அவர் கிளம்பிவிட தனம் சென்று அவரிடம் எதாவது சமையல் செய்பவரை விட்டு சமையல் பண்ணுங்க என சொல்ல வீட்டு பக்குவத்தில் யாரு செய்றா என அந்த கஸ்டமர் கேட்கிறார். தனம் எங்க நடு கொழுந்தன் ஹோட்டல் தொடங்கி இருப்பதாக சொல்ல, அந்த கஸ்டமர் சரி என சொல்கிறார்.

மூர்த்தியும் ஜீவாவும் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர். ஆனால் தனம் சொல்லி சமாளிக்கிறார். மறுபக்கம் ஐஸ்வர்யா பார்லர் பொருள்களை துடைத்து வைத்திருக்க கஸ்தூரி வருகிறார். அவரிடம் இத்தனை பொருள்கள் இருக்கிறதா அந்த பெண் நல்ல பொண்ணு தான் இத்தனையும் இலவசமாக கொடுத்து இருக்கிறாள் என சொல்கிறார். பின் மீனா இதெல்லாம் பழசு தான் என சொல்ல, ஐஸ்வர்யா அப்படியே இருந்தாலும் கொடுக்க மனம் வேண்டும் என சொல்கிறார். பின் கஸ்தூரி இதை எல்லாம் கடை பிடித்து வைத்து இருந்தால் நன்றாக இருக்கும் என சொல்ல, மீனா இவள் படித்து இருக்கிறாளா என்ற சந்தேகம் எனக்கு இருப்பதாக சொல்கிறார்.

ஜெனி அம்மா வந்ததால் வருத்தப்பட்ட செழியன், ஸ்கூல் பீஸ் கட்ட சொல்லும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

நான் படித்து இருக்கிறேன் சித்தி தான் என் மீது உள்ள கோவத்தில் சான்றிதழ்களை எரித்துவிட்டதாக சொல்ல கஸ்தூரி அதெல்லாம் எரிக்கவில்லை என சொல்கிறார். பின் மீனா படித்தது எல்லாம் சரி ஆனால் உனக்கு செய்ய தெரியுமா என கேட்க கஸ்தூரிக்கு செய்து காட்டுவதாக ஐஸ்வர்யா சொல்கிறார். பின் கஸ்தூரியை அமர வைத்து பேசியல் செய்கிறார். கஸ்தூரிக்கு ஐஸ்வர்யா பேசியல் செய்து விட மீனா அதை எல்லாம் அருகில் இருந்து பார்க்கிறார். ஐஸ்வர்யா எப்படி எல்லாம் செய்வது என சொல்லி கொண்டே செய்கிறார். பின் முல்லை கதிர் சாப்பாடு செய்துவிட்டு காத்துக் கொண்டிருக்க ஆட்கள் யாரும் வருவதாக இல்லை. மல்லி மீண்டும் அதை குத்தி காட்டி பேசுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!