வீட்டில் பார்லர் தொடங்கிய ஐஸ்வர்யா, தொழிலை முன்னேற்ற நினைக்கும் முல்லை – இன்றைய எபிசோட்!

0
வீட்டில் பார்லர் தொடங்கிய ஐஸ்வர்யா, தொழிலை முன்னேற்ற நினைக்கும் முல்லை - இன்றைய எபிசோட்!
வீட்டில் பார்லர் தொடங்கிய ஐஸ்வர்யா, தொழிலை முன்னேற்ற நினைக்கும் முல்லை - இன்றைய எபிசோட்!
வீட்டில் பார்லர் தொடங்கிய ஐஸ்வர்யா, தொழிலை முன்னேற்ற நினைக்கும் முல்லை – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிர் கடையில் இருந்து அண்ணாச்சி சாப்பாடு கொண்டு வர தனமும், ஜீவாவும் அதை சாப்பிடுகின்றனர். மறுபக்கம் ஐஸ்வர்யா வீட்டில் பார்லர் தொடங்கி இருக்கிறார். பின் முல்லையும் கதிரும் புது தொழிலை முன்னேற்ற பல திட்டங்களை யோசிக்கிறார்கள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மீனா தனத்திற்கு போன் செய்து சாப்பாடு வாங்க போகவில்லையா என கேட்க, தனம் ஜீவாவிடம் சாப்பாடு வாங்க போறியா என கேட்கிறார். ஆனால் ஜீவா எனக்கு பசி இல்லை என சொல்கிறார். பின் தனம் சாப்பாடு வேண்டாம் என சொல்ல மீனா சமைத்தது எல்லாம் வீணாகிவிடும் என சொல்கிறார். அதெல்லாம் இரவு சாப்பிடலாம் என தனம் சொல்கிறார். பின் அண்ணாச்சி சாப்பாடு கொண்டு வர தனம் எங்கிருந்து வருகிறது என கேட்கிறார். அப்போது அண்ணாச்சி கடை தெருவில் கதிர் கடைக்கு சென்றேன் அவங்க தான் உனக்கு சாப்பாடு கொடுத்ததாக சொல்கிறார. பின் தனம் இவ்வளவு சாப்பாட்டை நமக்கு கொடுத்தால் அவன் எப்படி வியாபாரம் பார்ப்பான் இனிமேல் இப்படி அவன் கடைக்கு போகாதீங்க என தனம் சொல்கிறார்.

அண்ணாச்சி சரி என சொல்ல தனமும், ஜீவாவும் அதை சாப்பிடுகின்றனர். ஜீவா சாப்பிட்டு பார்த்து நன்றாக இருப்பதாக சொல்ல தனம் சாப்பிட்டு கை பக்குவம் நன்றாக இருக்கிறது சீக்கரம் கஸ்டமர் வர தொடங்கிவிடுவார்கள் என சொல்கிறார். வீட்டில் ஐஸ்வர்யாவும் கண்ணனும் இணைந்து பார்லர் செட் செய்கின்றனர். பின் வீட்டில் அனைவரையும் வந்து பார்க்க சொல்ல மூர்த்தி இதெல்லாம் வெளியே இருந்தால் நன்றாக இருக்கும் நான் எதோ சிறிதாக இருக்கும் என நினைத்ததாக சொல்கிறார். பின் மீனாவும் இதெல்லாம் தனியாக கடை பிடித்து வைத்தால் தான் நன்றாக இருக்கும் என சொல்கிறார். இப்படி வீட்டிற்குள் ஆளுங்க வந்தால் சரியாக வருமா என மூர்த்தி கேட்கிறார். மேலும் பெண்கள் தான் வருவார்கள் என சொன்னாய் நம்ம வீட்டில் ஆம்பளைங்க இருக்காங்க இப்படி வீட்டிற்குள் ஆள் இருந்தால் தனியாக பேச கூட முடியாது என மூர்த்தி சொல்கிறார்.

பின் ஐஸ்வர்யா நான் காலை 10 மணிக்கு எல்லாரும் போனதும் ஆளுங்களை வர சொல்கிறேன் அதன் பின் 5 மணிக்கு மேல் யாரையும் விடமாட்டேன் என சொல்கிறார். ஜீவாவிடம் மூர்த்தி இதெல்லாம் சரியாக வருமா என கேட்க இப்போது தான தொடங்கி இருக்கிறாள் போக போக பாப்போம் இப்போதே வேண்டாம் என சொல்ல வேண்டாம் என சொல்கிறார். மூர்த்தி அதுவும் சரி தான் என சொல்ல ஐஸ்வர்யா சந்தோசப்படுகிறார். மறுபக்கம் முல்லையும் கதிரும் கடையை பற்றி பேச, கதிர் முல்லையை சீக்கிரமாக தூங்க சொல்கிறார். ஆனால் முல்லை நஷ்டம் எவ்வளவு ஆகி இருக்கிறது என பார்த்தால் தான் சரியாகும் என சொல்றார்.

ஈஸ்வரியை வெளியே போக சொன்ன ராதிகா, விஷயம் தெரிந்து வந்த ஜெனி அம்மா – இன்றைய எபிசோட்!

முதல் நாளில் இருந்ததை விட நஷ்டம் குறைந்து கொண்டே வருவதாக கதிர் சொல்ல இப்படியே நஷ்டம் வந்தால் என்ன ஆகும் என முல்லை கேட்கிறார். எல்லாம் மாறிவிடும் என கதிர் சொல்ல, முல்லை தினமும் நஷ்ட கணக்கு பார்க்க கவலையாக இருப்பதாக சொல்கிறார். பின் முல்லை தூங்காமல் என்ன செய்து நம்ம மெஸ்க்கு கஸ்டமரை வர வைக்கலாம் என யோசிக்கிறார். அப்போது கதிர் இன்னும் தூங்கவில்லையா என கேட்க, நம்ம தொழிலை எப்படி முன்னேற்றலாம் என யோசிப்பதாக சொல்கிறார். இதெல்லாம் கொஞ்சம் நல்ல நிலைமைக்கு வந்த பின் தான் செய்ய முடியும் என கதிர் சொல்ல முல்லை சரி என சொல்கிறார். மறுநாள் காலையில் ஐஸ்வர்யா எழுந்து சமையல் செய்ய தனம் என்ன புதிதாக இருப்பதாக கேட்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!