மீதமுள்ள உணவுகளை தானம் கொடுத்த கதிர் முல்லை, பார்சலால் வீட்டில் மாட்டிக் கொண்ட மூர்த்தி – இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லையும் கதிரும் மீதமான உணவுகளை சாப்பாடு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு கொடுத்து உதவுகின்றனர். மறுபக்கம் மீனா, மூர்த்தி சாப்பிட்டு போட்ட பார்சலை கொண்டு வந்து எல்லார் முன்னாடியும் காட்டுகிறார். மூர்த்தி மாட்டிக் கொண்டது போல முழிக்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி சாப்பாடு வேண்டாம் என சொல்ல ஆனால் தனம் கேட்காமல் சாப்பாடு வைத்து கொடுக்கிறார். இதை எப்படி சாப்பிடுவது என தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடுகிறார். எல்லாரும் சாப்பிட்டு முடித்துவிட மூர்த்தி சாப்பிட முடியாமல் இருக்கிறார். தனம் சாப்பிடுங்க என சொல்ல மூர்த்தி திணறி கொண்டிருக்கிறார். மறுபக்கம் மீதமான உணவுகளை முல்லையும் கதிரும் எடுத்து எல்லாருக்கும் கொடுத்து உதவி செய்கின்றனர். என்ன தான் நஷ்டம் ஆனாலும் இப்படி அடுத்தவர்களுக்கு கொடுத்து உதவி செய்தது நன்றாக இருப்பதாக முல்லை சொல்கிறார்.
என்ன தான் தைரியமாக இருந்தாலும் மல்லி அடிக்கடி சொல்வதை பார்த்தால் மனதில் ஏதோ ஒரு குழப்பமாக இருக்கிறது என சொல்கிறார். அதெல்லாம் எதுவும் ஆகாது, இப்போது பெரிய இடத்தில் இருப்பவர்கள் எல்லாரும் கஷ்டப்பட்டு வந்தவர்கள் தான் என முல்லை சொல்கிறார். பின் முல்லை என் அக்காவே இப்படி இருப்பதாக சொல்லி வருத்தப்பட உடனே கதிர் அவங்க பேசினால் பேசட்டும் நாம உழைப்பிற்கு நல்லா வருவோம், வந்து இதே ரோட்டில் காரில் போவோம் என சொல்கிறார். பின் கதிர் ரோட்டில் இருப்பவர்களுக்கு உணவு கொடுக்கிறார்.
எல்லாரும் கதிரை வாழ்த்துகின்றனர். மறுபக்கம் மீனா வெளியே பாத்திரம் கழுவ வர அங்கே யாரோ சாப்பிட்டு விட்டு போட்ட பார்சல் கிடக்கிறது. உடனே மீனா அதை எடுத்து கொண்டு வந்து எல்லார் முன்னாடியும் காட்டுகிறார். பக்கத்துக்கு வீட்டில் இருப்பவர்களுக்கு இதே வேலையாக இருக்கிறது என சொல்ல, ஐஸ்வர்யா ஆமாம் நானும் 2 முறை பார்த்தேன் என சொல்கிறார். மீனா இப்பவே சண்டை போட வேண்டும் என சொல்ல ஐஸ்வர்யா நானும் வருகிறேன் என சொல்கிறார். பின் மூர்த்தி அதெல்லாம் வேண்டாம் என சொல்ல, தனம் சந்தேகத்துடன் பார்க்கிறார்.
பின் மீனா கையில் இருப்பது கதிர் கடை பை போல இருப்பதை பார்த்து மாமா தான் போட்டு இருப்பதை கண்டுபிடிக்கிறார். பின் மீனா ஐஸ்வர்யாவை தடுத்து அமைதியாக இருக்க சொல்ல, கண்ணன் இந்த கவர் கதிர் அண்ணன் கடை கவர் என சொல்ல மூர்த்தி சமாளித்து எல்லாரையும் தூங்க சொல்கிறார். பின் அனைவரும் தூங்க சொல்ல மூர்த்தி வேகமாக படுகிறார். அவரிடம் தனம் கதிர் கடைக்கு போனது பற்றி கேட்க, முருகன் மாமா சொன்னதாக சொல்கிறார். அப்போ நீயும் போனியா என மூர்த்தி தனத்திடம் கேள்வி கேட்க தனம் பதில் சொல்லாமல் சமாளிக்கிறார்.
வீட்டில் நடந்ததை நினைத்து கதறி அழும் பாக்கியா, ராதிகாவை சந்தித்த கோபி – இன்றைய எபிசோட்!
மறுபக்கம் தனம் கடைக்கு கிளம்பி கொண்டிருக்க பாண்டியனை நான் பார்த்துக் கொள்கிறேன் என மீனா சொல்கிறார். நீங்க சண்டை போடாமல் இருப்பீர்களா என கேட்க ஆமாம் என மீனா சொல்கிறார். அப்போது ஐஸ்வர்யா வர நீ பியூட்டிசன் படித்து இருக்கியா என தனம் கேட்கிறார். ஆமாம் என ஐஸ்வர்யா சொல்ல அதை கேட்டு மீனா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்