முல்லையை சமாதானம் செய்த கதிர், கோவிலுக்கு சென்று வேண்டும் தனம் மூர்த்தி – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை நாளை மருத்துவமனைக்கு செல்வதை நினைத்து வருத்தத்துடன் இருக்கிறார். பின் கதிர் முல்லைக்கு ஆறுதல் சொல்கிறார். பின் தனமும் மூர்த்தியும் கோவிலுக்கு சென்று வேண்டிக் கொள்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை சோகமாக ரூமில் இருக்க அப்போது கதிர் வருகிறார். முல்லையிடம் என்ன யோசித்துக் கொண்டிருக்கிறாய் என கேட்க அப்போது முல்லை நாளைக்கு மருத்துவமனைக்கு போகிறோம் அதை நினைத்து பதட்டமாக இருப்பதாக சொல்கிறார். கதிர் எல்லாம் சரியாக தான் நடக்கும் நாம வேற எதாவது பேசுவோம் என சொல்லி முல்லை மீது நல்ல வாசனை வருவதாக சொல்கிறார். என்ன வாசனை என கேட்க, தினமும் உன்னை தூக்கும் போது அந்த வாசனை வரும் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
நாளைக்கு மருத்துவமனைக்கு போனால் உன்னை நடக்கலாம் என சொன்னால் என்ன செய்வது அப்பறம் உன்னை தூக்க முடியாது என சொல்கிறார். முல்லையிடம் சந்தோசமாக பேசி அவரது மனதை மாற்றுகிறார். மறுநாள் காலையில் விடிந்ததும் தனமும் மூர்த்தியும் கோவிலுக்கு வருகின்றனர். அப்போது தனம் நீங்க ரொம்ப நாள் ஆகிவிட்டது கோவிலுக்கு வந்து என சொல்ல செய்யும் தொழில் தான் எனக்கு தெய்வம் என மூர்த்தி சொல்கிறார். பின் இருவரும் சாமி கும்பிட முல்லை நல்லபடியாக கர்ப்பமாகி குழந்தை பிறக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறார்.
மூர்த்தி கதிர் முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் அப்படி பிறந்தால் அந்த குழந்தைக்கு இங்கே காது குத்தி மொட்டை அடிக்கிறேன் என வேண்டிக் கொள்கிறார். அடுத்ததாக கண்ணன் கயலை கொஞ்சிக் கொண்டிருக்கும் போது அவளுடைய விளையாட்டு பொருளை உடைத்துவிடுகிறார். அதனால் கயல் அழ கண்ணன் சமாதானம் செய்ய ஆனால் அவள் அழுது கொண்டே இருக்கிறார். அப்போது கதிர் ஜீவா மீனா என எல்லாரும் வர கயல் ஜீவாவிடம் போனதும் அழாமல் இருக்கிறாள். பின் கதிர் மருத்துவமனைக்கு போக வேண்டும் சீக்கிரம் கிளம்ப ஜீவா சொல்கிறார்.
வெண்பாவை திருமணம் செய்ய சொல்லும் ஷர்மிளா, பெண்ணை காப்பாற்ற கண்ணம்மா செய்த காரியம் – இன்றைய எபிசோட்!
மூர்த்தி கயலை வைத்து கொண்டு இருக்க தனம் கிளம்பி தயாராக இருக்கிறார். அப்போது மூர்த்தி கதிரிடம் காசு கொடுக்க கதிர் வேண்டாம் என சொல்கிறார். பின் தேவைப்படும் வைத்துக் கொள் என மூர்த்தி கொடுக்கிறார். பின் கதிர் முல்லை தனம் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கே முல்லை பதட்டமாக இருக்க தனம் ஆறுதல் சொல்கிறார். பின் கதிரை பணத்தை கட்டிவிட்டு வர சொல்கிறார். கதிர் பணத்தை கட்ட பின் முல்லையை பரிசோதனை செய்ய அழைத்து செல்கின்றனர்.