புது வீடு வாங்கவில்லை என வருத்தப்படும் மீனா, பின்னால் நின்று கேட்ட முல்லை – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்றைய எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மீனா முல்லைக்கு அவ்வளவு பணம் இப்போதைக்கு செலவு செய்ய வேண்டுமா வீடு தான முதலில் தேவை என பேசிக் கொண்டிருக்கிறார். அதை எல்லாம் முல்லை கேட்டுவிடுகிறார். பின் ஜனார்த்தனன் ஜீவாவிடம் அண்ணன்களை பற்றி குறை சொல்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், முல்லை கதிரிடம் எத்தனை நாட்களாக தான் அக்காவும் மாமாவும் ஹாலில் படுத்து இருப்பார்கள். கண்ணனும் ஐஸ்வர்யாவும் எப்போது நல்ல ரூமில் படுக்க போகிறார்கள் என கேட்க, அப்போது கதிர் நாம வீடு காட்டாமல் இல்லை டிரீட்மென்ட் எல்லாம் முடிந்த பின் வீடு காட்டுவோம் கடை காட்டும் போது நாம எல்லாம் செய்தோம் அது போல வீடு கட்டுவோம் என சொல்கிறார். இருவரும் சேர்ந்து கட்டாயம் வீடு கட்டுவோம் என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா கோலம் போட கண்ணன் ஐஸ்வர்யாவிடம் கலர் கோலம் போடவில்லையா என கேட்க, அப்போ நீ உதவி செய் என சொல்கிறார்.
TN Job “FB Group” Join Now
உடனே கண்ணன் கலர் போட ஏரியா பெண்கள் அதை பார்த்து கிண்டல் செய்கின்றனர். மூர்த்தி அதை எல்லாம் பார்த்து கோவப்பட வீட்டிற்குள் வருகிறார். தனம் ஜீவாவிடம் சொல்ல, அவர்கள் நக்கல் அடித்து சிரிக்கின்றனர். பின் கண்ணனை அழைத்து பேச அவரும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். பின் மீனாவும் ஐஸ்வர்யாவும் பேசிக் கொண்டிருக்கின்றனர். முல்லைக்கு இப்பவே டிரீட்மென்ட் பார்க்க வேண்டுமா தனம் அக்காக்கு லேட்டாக தான குழந்தை பிறந்தது அது போல பெற்றுக் கொள்ளாலாம் வீடு தான முக்கியம் என சொல்கிறார். அதை எல்லாம் முல்லை கேட்டு வருத்தப்படுகிறார்.
லட்சுமி உயிரை காப்பாற்றிய பாரதி, நடந்ததை நினைத்து வருத்தப்படும் கண்ணம்மா – இன்றைய எபிசோட்!
பின் ஜனார்த்தனன் திருச்சியில் ஒரு வேலை இருப்பதாக சொல்ல, தனியாக போக வேண்டாம் என கலை சொல்கிறார். அப்போது ஜீவா வர திருச்சியில் வேலை இருக்கிறதா என கேட்கிறார். ஆமாம் போக வேண்டும் என சொல்ல அவர் ஜீவாவை அழைக்கிறார். அதற்கு அண்ணன் அண்ணியிடம் சொல்லிவிட்டு வருகிறேன் என சொல்ல, ஜீவாவிடம் நீங்க தான் உங்களது அண்ணன் அண்ணியை தேடுகிறீர்கள் ஆனால் அவர்கள் ஒரு போன் கூட செய்யவில்லை என சொல்கிறார். ஆனாலும் அதான் எங்களது பழக்கம் என ஜீவா சொல்கிறார். இவரை நாம தான் படிப்படியாக மாற்ற வேண்டும் என ஜனார்த்தனன் கலையிடம் சொல்கிறார். மறுபக்கம் முல்லையின் அம்மா மற்றும் கஸ்தூரி வர முல்லையிடம் வீட்டில் டிரீட்மென்ட் பற்றி பேசினார்களா என கேட்கிறார். பேசிருக்கு அதற்கு நிறைய செலவாகும் இந்த குடும்பம் எங்கே பார்க்க போகிறது என சொல்ல அதற்கு முல்லை அவர்கள் பார்க்க தயாராக தான் இருக்கிறார்கள் என சொல்கிறார்.