கதிருக்கு தெரியாமல் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கதிருக்கு தெரியாமல் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யும் முல்லை - இன்றைய
கதிருக்கு தெரியாமல் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யும் முல்லை - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கதிருக்கு தெரியாமல் கோவிலுக்கு சென்று பரிகாரம் செய்யும் முல்லை – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணனை கஷ்டப்பட்டு படிக்க வைப்பதால் ஐஸ்வர்யாவை மூர்த்தி பெருமையாக நினைக்கிறார். பின் முல்லை கதிரிடம் பொய் சொல்லிவிட்டு கோவிலுக்கு செல்கிறார். கஸ்தூரி உடன் கோவிலுக்கு போன முல்லை கஷ்டப்பட்டு பரிகாரம் செய்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கண்ணனை இரவெல்லாம் படிக்க வைக்க ஐஸ்வர்யாவும் காத்திருக்கிறார். மூர்த்தி அவன் படித்துக் கொள்வான் நீ சென்று தூங்கு என சொல்ல ஆனால் ஐஸ்வர்யா நான் சென்றால் அவன் படிக்கமாட்டான் என சொல்கிறார். பின் மூர்த்தி தனத்திடம் நாம வீட்டிற்கு வந்த 4 மருமகளும் நல்லவர்கள் என சொல்கிறார். தனம் அதை நினைத்து சந்தோசப்படுகிறார். பின் முல்லை ரூமில் காத்துக் கொண்டிருக்க கதிர் வருகிறார். என்ன காலையில் இருந்து போன் செய்கிறாய் எதுவும் பேசாமல் இருக்கிறாய் என கேட்க, சும்மா பேச வேண்டும் என தோன்றியதாக சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

நாளைக்கு என் வீட்டிற்கு சென்றுவிட்டு வருகிறேன் என சொல்ல கதிர் சரி நாளைக்கு நானே கொண்டு சென்று விடுகிறேன் என சொல்கிறார். ஆனால் முல்லை வேண்டாம் என சொல்ல, இப்பவே போறியா என கேட்கிறார். இல்லை காலையில் தான் என சொல்ல, எதாவது பிரச்சனையா என கேட்க அதெல்லாம் இல்லை என முல்லை சொல்கிறார். பின் 7 மணிக்கு நான் போறேன் என முல்லை சொல்கிறார். மறுநாள் முல்லை கிளம்பி இருக்க கதிர் நான் சென்று விடுகிறேன் என சொல்கிறார். ஆனால் முல்லை வேண்டாம் நான் சென்றுவிடுகிறேன் என சொல்கிறார்.

பின் கண்ணன் பரிட்சைக்கு கிளம்ப ஐஸ்வர்யா வாழ்த்துக்களை சொல்கிறார். கண்ணன் தனம் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க மீனா என் காலிலும் விழ சொல்கிறார். ஆனால் கண்ணன் காமெடி பண்ணாதீங்க என சொல்கிறார். பின் தனம் நீ கிளம்பு என சொல்லி அனுப்புகிறார். முல்லை தனத்திடம் சொல்லிவிட்டு கிளம்ப, கஸ்தூரி நீண்ட நேரமாக காத்துக் கொண்டிருக்கிறார். அப்போது கதிர் போன் செய்ய முல்லை வீட்டிற்கு தான் போறேன் என சொல்கிறார். அப்போது முல்லை அத்தாச்சி தான் காரணம் என சொல்ல முல்லை வீட்டிற்கு போயிட்டு சீக்கரம் வா என சொல்கிறார்.

பாரதிக்கு வாழ்த்து சொல்ல வந்த லட்சுமி கண்ணம்மா, வெண்பாவை சாப்பிடவிடாமல் தடுக்கும் ஷர்மிளா – இன்றைய எபிசோட்!

முல்லை கஸ்தூரி பஸிற்கு காத்துக் கொண்டிருக்க நேராக கோவிலுக்கு செல்கின்றனர். அங்கே நிறைய பேர் வேண்டுதல்களை செய்ய முல்லை வேண்டுதலை செய்வாரா என கஸ்தூரி கேட்கிறார் அதெல்லாம் செய்துவிடுவேன் என முல்லை சொல்ல உன்னை கஷ்டப்படுத்தாமல் வளர்த்த உடம்பு தாங்குவியா என கேட்கிறார். அதெல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என முல்லை சொல்ல சாமி கும்பிட செல்கின்றனர். முல்லையை காத்துக் கொண்டிருக்க செல்ல அப்போது முல்லை கதிரிடம் மாசமா இருப்பதாக இருப்பதை சொன்னால் எப்படி இருக்கும் என நினைத்து பார்க்கிறார். பின் கஸ்தூரி வர மீனாவின் அப்பாவை வெளியே பாத்தேன் என சொல்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!