கண்ணனை தேர்வுக்கு படிக்க சொல்லும் ஐஸ்வர்யா, ஜீவாவிடம் பொறுப்புகளை கொடுத்த ஜனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
கண்ணனை தேர்வுக்கு படிக்க சொல்லும் ஐஸ்வர்யா, ஜீவாவிடம் பொறுப்புகளை கொடுத்த ஜனா - இன்றைய
கண்ணனை தேர்வுக்கு படிக்க சொல்லும் ஐஸ்வர்யா, ஜீவாவிடம் பொறுப்புகளை கொடுத்த ஜனா - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
கண்ணனை தேர்வுக்கு படிக்க சொல்லும் ஐஸ்வர்யா, ஜீவாவிடம் பொறுப்புகளை கொடுத்த ஜனா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனிற்கு எக்ஸாம் இருப்பதால் ஐஸ்வர்யா அவரை சீக்கிரமாக எழுந்திருக்க சொல்லி படிக்க சொல்கிறார். பின் ஜனார்த்தனன் ஜீவா பெயரில் அக்கவுண்ட் எல்லாத்தையும் மாற்றிவிடுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனிற்கு கல்லூரியில் எக்ஸாம் இருக்கிறது. அதனால் ஐஸ்வர்யா அதிகாலையில் கண்ணனை எழுப்பி படிக்க சொல்கிறார். கண்ணன் எழுந்திரிக்காமல் இருக்க ஐஸ்வர்யா மூஞ்சியில் தண்ணீர் ஊற்றி எழுப்புகிறார். பின் கண்ணன் எழுந்து படிக்க உட்கார சாமி கும்பிட்டு படி என ஐஸ்வர்யா சொல்கிறார். அப்போது கண்ணன் சத்தமாக பாட்டு பாடி சாமி கும்பிடுகிறார். மூர்த்தி சத்தம் கேட்டு எழுந்திரிக்க தனம் வந்து கண்ணன் ரூமை பார்க்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அப்போது கண்ணன் படித்து கொண்டிருப்பதை பார்த்து சந்தோசப்படுகிறார். நீயா படிக்கிறாய் என கேட்டு அதிர்ச்சி அடைகிறார். பின் முல்லை வந்து யாரு சத்தம் போட்டது என கேட்க உள்ளே சென்று பாரு என சொல்கிறார். அப்போது கண்ணன் படிப்பதை பார்த்து அவரையும் கிண்டல் செய்கிறார். பின் மீனா வர என்னமோ நீ படித்து நிறைய மார்க் வாங்க போறதாக நினைத்துக் கொண்டிருக்கிறான் ஆனால் அதெல்லாம் வாய்ப்பே இல்லை என சொல்ல ஐஸ்வர்யா அப்படி எல்லாம் இல்லை என சொல்கிறார்.

பின் கண்ணன் எக்ஸாம் கிளம்ப லட்சுமி அம்மா புகைப்படத்தை தொட்டு கும்பிட்டு கிளம்புகிறார். பின் தனத்திடம் ஆசிர்வாதம் வாங்க மீனா ஆல் தி பெஸ்ட் சொல்கிறார். பின் முல்லையும் வாழ்த்து சொல்ல மார்க் கம்மியாக வந்தால் அப்பறம் உன் பொண்டாட்டிக்கு பதில் சொல்ல வேண்டும் அதனால் சரியாக எழுது என சொல்கிறார். பின் ஐஸ்வர்யா முல்லைக்கு புதிதாக சட்னி செய்து வைத்திருப்பதாக சொல்கிறாள். முல்லைக்கு அது தான் பிடிக்குமாம் என சொல்ல மீனா எங்களுக்கு எல்லாம் இல்லையா என கேட்கிறார். இல்லை என சொல்ல, தனம் நீ ஒரு வேலையும் பார்க்க வேண்டாம் என சொல்கிறார்.

லட்சுமி எதிர்காலத்திற்கு புதிய வேலை தேடும் கண்ணம்மா, சௌந்தர்யா வீட்டிற்கு வந்த விக்ரம் – இன்றைய எபிசோட்!

முல்லை எனக்கு கூடுதல் அக்கறை கொடுப்பது எல்லாம் வேண்டாம் என சொல்கிறார். எனக்கு எதோ குறை இருப்பது போல இருக்கிறது அதனால் எப்பவும் போல வேலை பாருங்கள் என சொல்கிறார். பின் ஜனார்த்தனன் வீட்டில் மாப்பிள்ளை பெயரில் அக்கவுண்ட் எல்லாம் மாற்றி வைத்துள்ளதாக சொல்கிறார். மேனேஜர் அழைத்து இனிமேல் காசு வேண்டும் என்றால் மாப்பிள்ளையிடம் தான் கேட்க வேண்டும் என சொல்கிறார். ஜீவா அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். பின் முல்லையை பார்க்க அவரது அம்மா வர முல்லை மூத்த பொண்ணு வீட்டிற்கு போகவில்லையா என் கேட்கிறார். நீ இப்படி இருக்கும் போது உன்னை பார்க்க வேண்டும் என சொல்ல, முல்லை நன்றாக தான இருக்கிறாள் என தனம் சொல்கிறார். பார்க்க அப்படி தெரியும் என கஸ்தூரி சொல்ல முல்லை வருத்தப்படுகிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!