‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தை கலாய்க்கும் ஐஸ்வர்யா, கடுப்பான மூர்த்தி – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எதிர் வீட்டிற்கு குடி வந்த ஐஸ்வர்யாவும் கண்ணனனும் குடும்பத்துடன் சேர முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஐஸ்வர்யா மூத்த அண்ணன் மூர்த்தியை பயங்கரமாக கலாய்த்து விடுகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 3 அண்ணன்கள் ஒரு தம்பி என்று பாசம் நிறைந்த குடும்பமாக கதையாக அமைந்துள்ளது. வீட்டின் மூத்த மருமகளான வரும் தனம் குடும்பத்தை பொறுப்பாக நடத்தி வருகிறார். பல வருடங்களுக்கு பிறகு தனம் இப்பொது கர்ப்பமாக உள்ளார். இந்த நேரத்தில் வீட்டின் கடைசி பையனான கண்ணன் வீட்டிற்கு தெரியாமல் ஐஸ்வர்யாவை திருமணம் செய்கிறார். இது தெரிந்து குடும்பமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சன் டிவியில் பிரபல சீரியல்கள் ஒளிபரப்பாகும் நேரம் மாற்றம் – புதிய சீரியல் அறிமுகம் எதிரொலி!
மொத்த குடும்பமும் அவனை வெறுத்து ஒதுக்கி இருவரையும் வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டனர். இந்த சோகத்தில் கண்ணனின் அம்மா லெட்சுமி திடிரென இறந்து விட்டார். இந்த விஷயம் கண்ணனுக்கு தெரியாமல் போக கடைசி வரை அம்மாவை கண்ணன் பார்க்கவில்லை. இந்த நிலையில் கண்ணனுக்கும் அவரின் குடும்பத்திற்க்கான உறவிலும் விரிசல் விழ தொடங்குகிறது. இந்த நேரத்தில் ஐஸ்வர்யாவின் சித்தி கஸ்தூரி கண்ணனை அவரின் குடும்பத்துடன் சேர்க்க முயற்சிக்கிறார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” அண்ணி தனத்தின் மாடர்ன் அவதாரம் – ரசிகர்கள் ஷாக்!
ஐஸ்வர்யா, வாய்ப்பை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தின் வீட்டிற்கு எதிராகவே குடி வருகிறார். அடிக்கடி வீட்டிற்கு சென்று அங்குள்ளவர்களிடம் பேச முயற்சித்து வருகிறார். கயல் பாப்பாவை கொஞ்சுவது போல் வீட்டில் அனைவரிடமும் பேசுகிறார். மேலும் மூத்த அண்ணன் மூர்த்தியை வச்சி செய்து விடுகிறார். கண்ணனுக்கு பயம் இருந்தாலும் ஐஸ்வர்யாவின் பேச்சால் மூர்த்திக்கு பதில் பேச முடியவில்லை. தொடர்ந்து ஐஸ்வர்யா பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்துடன் பேசி மீண்டும் குடும்பத்துடன் இணைய நினைக்கிறார். இவர்கள் இருவரையும் வீட்டினர் மன்னித்து ஏற்றுக்கொள்வார்களா? என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.