மீனாவை வம்புக்கு இழுக்கும் ஐஸ்வர்யா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ இன்றைய எபிசோட்!
தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதிதாக இட்லி கடை துவங்கி இருக்கும் ஐஸ்வர்யாவிடம் இட்லி வாங்குவதற்காக வரும் மீனாவை அவர் வம்புக்கு இழுப்பதை போல அடுத்தகட்ட கதைக்களத்திற்கான ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடந்த பல எபிசோடுகளாக ஒட்டும் உறவும் இல்லாமல் இருந்து வந்த மூர்த்தி, கண்ணன் இருவரும் மீண்டுமாக ஒட்டத்துவங்கி உள்ளனர். அந்த வகையில் மூர்த்தி குடும்பத்தினர் சுற்றுலா செல்ல, கடை வியாபாரத்தை காப்பாற்றுவதற்காக கண்ணன் முயற்சி செய்கிறார். இது தெரியாமல் கண்ணனை, மூர்த்தி அடிக்கப்போக வீடே களேபரமாக மாறி விடுகிறது. பிறகு கண்ணன் செய்தது சரி தான் என ஒப்புக்கொள்ளும் மூர்த்திக்கு அவர் மீது உள்ள கோபம் மாறுகிறது.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி வெளியிட்ட புகைப்படங்கள் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
என்றாலும் இதுவரை எதிரும், புதிருமாக இருந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பம் மீண்டுமாக ஒன்றிணைவதை பார்க்கும் ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்படுகிறது. மறுபக்கத்தில் ஜனார்த்தனன் கடையில் இருந்து வெளியேற்றப்படும் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் குடும்பத்தை நடத்துவதற்காக இட்லி கடை வைத்துள்ளனர். ஏற்கனவே இட்லி வியாபாரத்தை துவங்கி இருக்கும் ஐஸ்வர்யா, தனம் மற்றும் முல்லையிடம் வம்பிழுக்கிறார். இதனை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் புதிய எபிசோடில், கடைக்கு இட்லி வாங்க செல்லும் மீனாவிடம் பேச்சு கொடுக்கிறார் ஐஸ்வர்யா.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” கதிர் குமரன் செய்த சாதனை – குவியும் வாழ்த்துக்கள்! சிறந்த நடிகருக்கான விருது!
அதாவது வீட்டு வாசலில் தயங்கியபடியே நிற்கும் மீனாவிடம், இட்லி வேணுமா என ஐஸ்வர்யா கேட்க, நான் காசு கொடுத்து வாங்கிக் கொள்கிறேன் என மீனா சொல்கிறார். தொடர்ந்து, காசு இல்லாமல் இட்லி தர மாட்டேன், உங்க கடையில் இருந்து பணம் இல்லாமல் பொருள் தருவீர்களா என கேட்டு மீனாவை வம்புக்கு இழுக்கிறார் ஐஸ்வர்யா. இந்த காட்சிகள் இன்றைய எபிசோடில் இடம்பிடித்திருக்கும் நிலையில், மீண்டுமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேர வேண்டும் என ரசிகர்கள் தங்களது எதிர்பார்ப்பை கமெண்ட் பக்கத்தில் தெரிவித்து வருகின்றனர்.