புது வீட்டில் வாழ்க்கையை தொடங்கும் கண்ணன், ஐஸ்வர்யா – இன்றைய எபிசோட்!
விஜய் டிவியில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது வீட்டில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் மகிழ்ச்சியாக தங்களது வாழ்க்கையை துவங்க ஆரம்பிக்கின்றனர். அதன்பின் கடை கணக்கில் ரூ.4000 குறைவதாக மூர்த்தி கேள்வி கேட்கிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இன்று தங்க இடமில்லாமல் தவித்த கண்ணனும் ஐஸ்வர்யாக்கும் தற்போது மூர்த்தியின் நண்பராக அறிமுகமாகும் நபரிடமிருந்து உதவி கிடைக்கிறது. இதனால் இருவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் வீட்டிற்கு செல்லும் இருவரும் வீட்டின் வாடகை மற்றும் இதர விஷயங்களை பற்றி பேசும் போது அவர் வீட்டின் சாவியை கொடுத்து விட்டு கிளம்பி விடுகிறார். அதற்கு பிறகு கண்ணன் ஐஸ்வர்யாவிடம் இந்த மாதிரியான இடத்தில் தங்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறார்.
தமிழக வணிகவரித்துறை அமைச்சர் முக்கிய உத்தரவு – அதிகாரிகள் கவனத்திற்கு!
இதனை தொடர்ந்து இருவரும் தங்களின் வாழ்க்கை பற்றி பேச துவங்குகின்றனர். இருவரும் அனுபவித்த கஷ்டங்களை பற்றி ஒருவர் கையை ஒருவர் பிடித்து பேசிக்கொண்டு இருந்தனர். அதனை தொடர்ந்து நான் வேலைக்கு செல்ல வேண்டும் உன்னை படிக்க வைக்க வேண்டும் என்று கூறும் கண்ணனிடம் ஐஸ்வர்யா கோவப்பட்டு திட்டி விட்டு தூங்கி விடுகிறார்.
TN Job “FB Group” Join Now
இதனை தொடர்ந்து மூர்த்தி தன் வீட்டுக்கு வருகிறார். தனத்திடம் அம்மாவின் நிலைமையை பற்றி கேட்கும் போது அவரின் உடல் நிலை சரியாக உள்ளது, ஆனால் மனசுதான் சரி இல்லை என தனம் மற்றும் கதிர் இருவரும் கூறுகின்றனர். அவரின் நிலைமையை நினைத்து குடும்பமே வருத்தப்படுகிறது. பிறகு கடைசியாக கடை கணக்கு பற்றி மூர்த்தி, ஜீவா மற்றும் கதிர் பார்க்கும் போது ரூ.4000/- குறைகிறது. அதனை சரி பார்க்கும் படி ஜீவாவிடம் மூர்த்தி சொல்லிவிட்டு கிளம்புகிறார். கதிர் ஜீவாவிடம் இந்த பணத்தை நீ கண்ணனுக்கு கொடுத்தாயா? என கேட்கிறார் அதை கேட்டு ஜீவா உண்மையை கூறுகிறார். இவ்வாறாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.