தனத்தை திட்டும் பார்வதி, கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டை விட்டு வெளியேற சொல்லும் நண்பரின் அம்மா – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை பற்றி விசாரிக்க முல்லையின் அம்மா அப்பா வருகிறார். ஊர் மக்களும் கண்ணனை பற்றி கேட்டு மீண்டும் அசிங்கப்படுத்துகின்றனர். பின்னர் கண்ணனின் நண்பன் அம்மா வந்து இருவரையும் வீட்டை விட்டு அனுப்புகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை வெளியே அனுப்பியதை நினைத்து வருத்தப்படுகின்றனர். மூர்த்தி கடை வேலைகளை பார்க்க சொல்லி கதிர் ஜீவாவிற்கு சொல்கின்றனர். அப்போது முல்லையின் அம்மா அப்பா வருகின்றனர். முல்லையின் அப்பா கண்ணனை பற்றி வருத்தப்படும் நேரத்தில் அவரது அம்மா பார்வதி தனத்தின் வளர்ப்பு சரி இல்லை என திட்டுகிறார்.
கண்ணன் பண்ண தப்பிற்கு தனம் என்ன செய்வார் என கதிர் சொல்கிறார். பின்னர் மல்லி புருஷனும் இல்லாமல் அந்த பையனை எப்படி வளர்த்தால், இப்படி ஆகிவிட்டது மதுரை போய் எல்லாரிடமும் என்ன சொல்வாள் என்று பேசுகிறார். பின்னர் மூர்த்தி கதிர் ஜீவா வெளியே செல்ல அக்கம்பக்கத்தினர் ஒன்று கூடி கண்ணனை பற்றி பேசுகின்றனர்.
அண்ணன் தம்பிக்கு எடுத்துக்காட்டாக இருந்த உங்க குடும்பத்திற்கு இப்படி ஒரு நிலைமையா என்று கேட்கின்றனர். இப்போ அனுப்புகிற மாதிரி அனுப்பிட்டு பின்னர் சேர்த்துக் கொள்வீர்கள் அப்படி தானா என்று பேசுகின்றனர்.உடனே கோவப்பட்ட கதிர் நாங்க அப்படியெல்லாம் இல்லை என்று பேசி அவர்களின் வாயை அடைகிறார். ஒரு பக்கம் கண்ணனும் ஐஸ்வர்யாவும் நண்பனின் வீட்டில் தங்கி இருக்கின்றனர். அப்போது அவர் நண்பரின் அம்மா வந்து சண்டை போடுகிறார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கட்டுப்பாட்டு பகுதிகள் அகற்றம் – தமிழக அரசு ஆணை!
இன்னும் ஒரு மணி நேரத்தில் வீட்டை காலி செய்ய வேண்டும் என எச்சரிக்கிறார். கண்ணனின் நண்பன் மன்னிப்பு கேட்கிறார். கண்ணன் வீட்டை விட்டு கிளம்ப தயாராகிறார்.பின்னர் கண்ணனை நினைத்து லட்சுமி அம்மா கவலையில் சாப்பிடாமல் தூங்காமல் இருக்க முல்லையின் அம்மா பார்வதி சென்று அவருக்கு தைரியம் சொல்கிறார். நீங்கள் தான் எங்களுக்கு தைரியம் சொல்ல வேண்டும் ஆனால் நீங்களே இப்படி இருந்தால் எப்படி அத்தை என்று தனம் கேட்கிறார். இத்துடன் இந்த எபிசோட் முடிவடைகிறது.