சிறந்த ஜோடி என 10 லட்சம் வென்ற கதிர், முல்லை.. தம்பி உயிரை காப்பாற்ற சரியான நேரத்தில் வந்த மூர்த்தி!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கதிரை கத்தியால் குத்த வர அந்த நேரம் பார்த்து மூர்த்தியும் ஜீவாவும் வந்து கதிரை காப்பாற்றுகின்றனர். அதன் பின் முல்லை கதிருக்கு சிறந்த ஜோடிக்கான 10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கதிரை அடிக்க ஆட்கள் வர கதிர் அவர்களை அடித்து நொறுக்குகிறார். பின் மூர்த்தி ஜீவா அந்த நேரம் வருகின்றனர். அப்போது கதிரை ஒரு ரௌடி கத்தியால் குத்த வர முல்லை அதை பார்த்து அதிர்ச்சி அடைகிறார். அப்போது சரியான நேரம் பார்த்து மூர்த்தி வந்து கத்தியால் குத்த வந்தவனை தடுக்கிறார். பின் ஜீவாவும் மூர்த்தியும் வந்து ரௌடிகள் எல்லாரையும் அடித்து நொறுக்குகிறார்கள்.
Follow our Instagram for more Latest Updates
பின் கதிர் எனக்காக நீங்க வந்ததற்கு ரொம்ப சந்தோசமாக இருப்பதாக சொல்ல, உடனே மூர்த்தி என் தம்பிக்கு ஏதாவது ஒன்று என்றால் நாங்க வராமல் இருக்கமாட்டோம் என சொல்கிறார். உடனே மூர்த்தி பேசியதை கேட்டு கதிர் வருத்தப்படுகிறார். மூவரின் பாசத்தை பார்த்து முல்லை கண்ணீர் சிந்துகிறார். நான் சொல்வதை கேட்காமல் நீ சென்றதால் தான் அண்ணனுக்கு உன் மீது கோவம், அதனால் தான் உன்னுடன் பேசாமல் இருந்தேன். அதற்காக என் தம்பி மீது யாராவது கை வைத்தால் நான் சும்மா இருப்பேனா அவனை கொன்றுவிடமாட்டேன் என மூர்த்தி சொல்கிறார். நீங்க எல்லாரும் அண்ணனின் பிள்ளைகள் என மூர்த்தி சொல்ல, அவர்களின் பாசத்தை பார்த்து முல்லை அழுகிறார்.
Exams Daily Mobile App Download
நீங்க பிரச்சனையில் இருப்பது போல் தோன்றி கொண்டே இருந்தது என ஜீவா சொல்ல, மூர்த்தி வருத்தப்படாதே கதிர் என சொல்கிறார். பின் மூர்த்தி போட்டி பற்றி கேட்க, முல்லை ஜெயிச்சோம் மாமா என சொல்கிறார். மூர்த்தி அதை கேட்டு சந்தோசப்படுகிறார். பின் போட்டி தொடங்க, கதிரும் முல்லையும் வெற்றி பெற்றதாக அறிவிக்கின்றனர். அவர்களுக்கு 10 லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது. அப்போது கதிர் என் அண்ணன் கையால் பரிசு வாங்க வேண்டும் என சொல்கிறார். மூர்த்தி ஜீவா மேடைக்கு வந்து பரிசை கொடுக்கின்றனர். அப்போது முல்லை மிகவும் சந்தோசமாக இருப்பதாக சொல்கிறார்.
தமிழகத்தில் இன்று ( நவ. 7) இந்த பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு – பொதுமக்களே உஷார்!
பின் கதிர் பேச நான் போட்டியில் வெற்றி பெற்றால் கூட இவ்வளவு சந்தோசமாக இருக்கமாட்டேன். ஆனால் என் அண்ணன்கள் இந்த மேடையில் இருப்பது எனக்கு மிகவும் சந்தோசமாக இருப்பதாக கதிர் சொல்கிறார். பின் கதிர் இங்கே விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்காமல் இருந்தால் என் அண்ணன்கள் வந்திருக்கமாட்டார்கள். எனக்காக என் அண்ணன்கள் வந்தார்கள், இந்த நிமிசத்தை நான் மறக்கவே மாட்டேன் என வருத்தப்பட்டு பேசுகிறார். பின் கதிர் முல்லை வெற்றி பெற்றதை பற்றி மூர்த்தி பேச, இவங்க இருவருக்கும் சிறந்த ஜோடி அவார்ட் கொடுக்காமல் இருந்தால் தான் நான் சண்டை போட்டுருப்பேன், இவங்க தான் சிறந்த ஜோடி, எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது என மூர்த்தி பேசுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.