‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை சித்ரா குறித்து மனம் உருகிய வெங்கட், குமரன் – ரசிகர்கள் நெகிழ்ச்சி!
தமிழ் சின்னத்திரை சீரியல் நடிகை சித்ரா மறைந்து இன்றுடன் ஒரு ஆண்டு கடந்துள்ள நிலையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் இவருடன் பயணித்திருந்த நடிகர்கள் சித்ராவை பற்றிய சில உருக்கமான பதிவுகளை வெளியிட்டுள்ளனர்.
நடிகை சித்ரா
விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் ஒரு முக்கியமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த தொடரில் முல்லை என்ற கதாப்பாத்திரத்தில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் நடித்து மக்களின் பேராதவரை சம்பாதித்திருந்தவர் நடிகை சித்ரா. தமிழ் சின்னத்திரையில் ஒரு விஜேவாக தனது பணியை துவங்கிய சித்ரா, விஜய் டிவி சீரியல்கள் மூலம் நடிகையாக உயர்ந்தார். அந்த வகையில் ‘சரவணன் மீனாட்சி’, ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து வந்த சித்ராவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானார்கள்.
விஜே சித்ராவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் – சோகத்தில் ரசிகர்கள்!!
அதுவும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் முல்லை கதாப்பாத்திரம் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை அடையாளத்தையும் பெற்றுத் தந்தது. குறிப்பாக இத்தொடரின் கதிர் – முல்லை ஜோடிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. சின்னத்திரையில் இந்த ஒரு உயரத்தை அடைவதற்கு இவர் பட்ட கஷ்டங்கள், கடந்த போராட்டங்கள் அதிகம். இவை அத்தனையும் தாண்டி வெறும் 28 வயதில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை பெற்றுக் கொண்ட நடிகை சித்ரா மிகவும் தைரியமான பெண்ணும் கூட.
இப்படி கொண்டாட்டமாக கடந்து வந்த இவரது வாழ்க்கையில், இதே போன்றதொரு நாளில் சில சோகமாக நிகழ்வுகள் நடைபெற தனது வாழ்க்கையை முடித்து கொண்டார். அதாவது கடந்த ஆண்டு டிச.9ம் தேதியன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவுக்கு இன்று முதலாம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இவர் இவ்வுலகத்தை விட்டு கடந்து சென்று ஒரு ஆண்டு முடிந்திருக்கும் நிலையில், சித்ராவுடன் நடித்த நடிகர்களும், ரசிகர்களும் இந்த நாளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிகை சித்ராவுக்கு ஜோடியாக நடித்திருந்த நடிகர் குமரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, ‘இந்த நாளில் உன்னை நினைவு கூறுகிறோம். எங்களுடைய இதயத்தில் நீ எப்போதும் இருப்பாய்’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார். இவரை தொடர்ந்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஜீவாவாக நடித்து வரும் நடிகர் வெங்கட், ‘மக்களின் இதயத்தில் நீங்கா இடம்பிடித்து இப்போது அத்தனை பேரையும் தவிக்க விட்டாயே.
உன் நினைவுகள் இல்லாமல் ஒரு நாளும் கடந்ததும் இல்லை. புத்துணர்வு தர கூடிய உன் வார்த்தைகள் இன்றும் என்றும் என் செவிகளில் ரீங்காரமிட்டு கொண்டிருக்கும். உன் நினைவுகளோடு் என்றும் உன் நண்பன் வெங்கட்’ என்று பதிவிட்டுள்ளார். அதே போல இத்தொடரில் கண்ணனாக நடித்து வரும் நடிகர் சரவண விக்ரமும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சித்ராவின் புகைப்படத்தை பதிவிட்டு, அக்கா என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.