‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஐஸ்வர்யா வைஷாலி கணவருடன் கார்த்திகை தீப திருநாள் கொண்டாட்டம் – ரசிகர்கள் வாழ்த்து!
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னதாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த வைஷாலி தனிகா தனது கணவருடன் கார்த்திகை திருநாளை கொண்டாடியிருக்கிறார். அந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுருக்கிறார்.
கார்த்திகை கொண்டாட்டம்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் பிரபலங்கள் அனைவருமே சின்னத்திரை உலகிலும் சரி, மக்கள் மத்தியிலும் சரி அதிக பிரபலமடைந்துள்ளனர். இதனால் அதிக ரசிகர்களையும் பெற்றுள்ளனர். மிகவும் குடும்ப பாங்கான கதையம்சம் கொண்ட தொடராக உள்ளது பாண்டியன் ஸ்டோர்ஸ். மேலும், ஒவ்வொரு வீட்டிலும் அந்த தொடரில் வரும் கதாபாத்திரங்களை போல் ஒருவர் இருப்பார். இதனால் மக்கள் கதையை தங்களுடன் தொடர்பு படுத்திக் கொண்டு தங்கள் வீட்டில் நடப்பது போல் மிகவும் ஆர்வமாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை பார்த்து வருகின்றனர்.
“பாரதி கண்ணம்மா” சீரியலில் இருந்து இடைவெளி எடுத்த அருண் – அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!
மிகவும் பாசமாக இருக்கும் குடும்பத்தில் கடைசி தம்பியான கண்ணன் வீட்டிற்கு தெரியாமல் உறவுக்கார பெண்ணை காதல் திருமணம் செய்து கொள்கிறான். இத்னால்க் குடும்பத்தில் உள்ள அனைவரும் கண்னனை தள்ளி வைக்கின்றனர். அவனை வீட்டில் எதற்கும் சேர்க்காமல் இருக்கின்றனர். இந்த கதையில் கண்ணனின் காதலியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் தற்போது மூன்றாவது நபர் நடித்து வருகிறார். முதன் முதலில் ஐஸ்வர்யாவாக நடித்தது வைஷாலி தனிகா தான். இவர் இதற்கு முன்னர் ராஜா ராணி சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டார்.
கோபிக்காக காத்திருக்கும் மயூரா, குடும்பத்தை விட்டு வருவாரா கோபி? இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!
வைஷாலிக்கு சமீபத்தில் கடந்த மாதத்தில் தான் திருமணம் நடைபெற்றது. இவர் தனது 10 வருட காதலரான தேவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது திருமண வீடியோக்கள் மற்றும் போட்டோக்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் பரவி வந்தது. இந்நிலையில், திருமணம் முடிந்த பின்னனர் வரும் முதல் கார்த்திகை தீப திருநாளை தனது கணவருடன் கொண்டாடியுள்ளார். வீடு முழுவதும் விளக்குகளை வைத்து அலங்காரம் செய்துள்ளார். இந்த வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.