முல்லையுடன் கர்ப்பமாகும் ஐஸ்வர்யா, அதிர்ச்சியில் தனம் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வருபவை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என அனைவரும் ஆசையாக காத்திருக்கின்றனர். இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் முல்லை மட்டுமல்லாமல் ஐஸ்வர்யாவும் கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பமே சந்தோசமாக இருக்கும் இந்த நேரத்தில் முல்லைக்கு நல்லபடியாக டிரீட்மென்ட் ரிசல்ட் வந்ததை நினைத்து அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். முல்லை இப்பவே கர்ப்பமாகிவிட்டது போல அனைவரும் சந்தோசமாக இருக்க ஆனால் கதிருக்கு ஒரு பக்கம் பயம் இருக்கிறது. அவர் தனத்திடம் சொல்லி வருத்தப்பட ஆனால் தனம் அப்படி எதுவும் நடக்காது என சொல்லி ஆறுதல் சொல்கிறார். இருந்தாலும் கதிர் முல்லையின் பிடிவாதத்தை நினைத்து வருத்தப்படுகிறார்.
TRPயில் பின்னடைவை சந்தித்த “ராஜா ராணி 2” சீரியல் – காரணம் ஆலியாவா? ரசிகர்கள் வருத்தம்!
மறுபக்கம் முல்லையின் அம்மா அப்பா குழந்தைக்கு பெயர் வைக்க இருப்பது பற்றி கூட பேச முல்லை அதை நினைத்து சந்தோசப்படுகிறார். இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் மீனா முல்லைக்கு செலவானதை நினைத்து வருத்தப்பட்டு பேசுகிறார். அதை எல்லாம் கேட்டு கூட கதிர் முல்லையின் சந்தோசம் முக்கியம் என அமைதியாக இருக்கிறார். இப்படி முல்லையை சுற்றியே தற்போது கதை சென்று கொண்டிருக்கிறது. குடும்பத்தில் ஒருவருக்கு பிரச்சனை என்றால் அனைவரும் எப்படி துடிக்கிறார்கள் என்பதால் பல குடும்ப ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்க்கின்றனர்.
Exams Daily Mobile App Download
இந்நிலையில் இனி வரப் போகும் எபிசோடுகளில் முல்லைக்கு கர்ப்பம் உறுதியாகிவிட ஆனால் ஐஸ்வர்யா பெரிய அதிர்ச்சி செய்தியை சொல்லப் போகிறார். அதாவது அவரும் கர்ப்பமாக இருப்பதாக சொல்ல, கண்ணன் குடும்ப பொறுப்புகளை கவனிக்கவில்லை என சில பிரச்சனைகள் வர இருக்கிறது. அதனால் இனி கதையில் அடிக்கடி சுபநிகழ்ச்சிகள் வர இருக்கிறது. மேலும் முல்லை ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர்.