“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை அம்மாவாகும் அழகான தருணம் – ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் செயற்கை முறையில் கருத்தரிப்பு செய்தும் கூட முல்லைக்கு குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருக்கிறது. இந்நிலையில் இனி வரும் எபிசோடுகளில் முல்லை தாயாகும் அழகான தருணங்கள் குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தில் பணக்கஷ்டம் இருந்தாலும் குடும்பத்தில் சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் இருக்கிறது. இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்திற்கு எப்படி எல்லாம் பணம் சேமித்து வைக்கலாம் என்பதை பற்றியே கதையில் காட்டப்பட்டு வருகிறது. ஆனால் பண கஷ்டம் வரும்போதெல்லாம் முல்லைக்கு செலவு செய்தது பற்றியே பேச்சு வருகிறது. கஷ்டமான சூழ்நிலையில் கடன் வாங்கி முல்லைக்கு செயற்கை கருத்தரிப்பு செய்தார்கள்.
ஆனால் அதுவும் பலனளிக்கவில்லை. அதை நினைத்து முல்லை மிகவும் வருத்தத்துடன் இருக்கிறார். முல்லை கதிர் காதலுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தாலும் அவர்களின் ஒரே எதிர்பார்ப்பு முல்லை கதிருக்கு குழந்தை பிறக்குமா என்பது தான் இருக்கிறது. இந்நிலையில் முல்லை தற்போது குழந்தை வராது என மனதை தைரியப்படுத்தி வருகிறார். ஆனால் முல்லைக்கு இயற்கையாகவே இனி வரும் எபிசோடுகளில் குழந்தை வர இருக்கிறது. முல்லை கர்ப்பமான செய்தியை கேட்டு கதிர் சந்தோஷத்தில் இருக்கிறார்.
Exams Daily Mobile App Download
குடும்பத்தில் அனைவரும் முல்லை கர்ப்பமாக இருப்பதை நினைத்து சந்தோசப்பட இருக்கிறார். முல்லைக்கு பிரசவ வலி வர அது குறித்த சந்தோசமாக தருணங்கள் எப்படி இருக்கும் என எடிட் செய்யப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வரும் இந்த ப்ரோமோவில் வரும் காட்சிகள் உண்மையாக எபிசோடுகளில் எப்போது வரும் என ஆவலுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.