போலீசிடம் சிக்கிய கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா, காரணம் இதுவா? “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் ஐஸ்வர்யாவின் ஆசையின் படி கண்ணன் இரவு வெளியே கூட்டிக் கொண்டு செல்கிறார். அப்போது ஹோட்டலில் அவர்கள் சாப்பிட காசு கொண்டு வர மறந்து விடுகின்றனர். அதனால் போலீஸ் கேஸ் ஆகிவிடுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கதிர் பிரச்சனை ஒரு பக்கம் இருக்க தற்போது கண்ணன் ஐஸ்வர்யா மீது கதை திரும்பி இருக்கிறது. ஐஸ்வர்யா, கண்ணனை வெளியே அழைத்து செல்ல சொல்கிறார். அண்ணனிற்கு தெரியாமல் போவதை நினைத்து கண்ணன் பயப்பட்டாலும் ஐஸ்வர்யாவின் ஆசையை நிறைவேற்ற கூட்டிக் கொண்டு செல்கிறார். வழியில் மூர்த்தி கண்ணில் சிக்கிவிட அவரிடம் இருந்து தப்பித்து செல்கிறார்.
திருமண கோலத்தில் வீடியோ வெளியிட்ட “பாரதி கண்ணம்மா” வினுஷா – ரசிகர்கள் ஷாக்!
பின் இருவரும் வண்டியில் கிளம்ப காதல் பாடல்களை கண்ணன் போட சொல்கிறார். ஐஸ்வர்யாவும் கண்ணனும் இரவு ஹோட்டலிற்கு செல்கின்றனர். அங்கே பயங்கர கூட்டம் இருக்கிறது. கண்ணன் ஐஸ்வர்யாவிற்கு தேவையானதை ஆர்டர் செய்து சாப்பிட ஐஸ்வர்யாவும் நன்றாக சாப்பிடுகிறார். இறுதியாக கண்ணன் காசு இருப்பதை பார்க்க அப்போது தான் காசு இல்லாதது தெரிய வருகிறது. அப்போது கண்ணன் பதட்டம் அடைய ஐஸ்வர்யாவிற்கு என்ன செய்வது என தெரியவில்லை.
Exams Daily Mobile App Download
காசு இல்லாமல் சாப்பிட்டதால் ஐஸ்வர்யாவும் கண்ணனும் பெரிய சிக்கலில் சந்திக்கின்றனர். இரவு நேரம் என்பதால் யாரிடமும் உதவியும் கேட்க முடியாமல் இருக்கின்றனர். கடைக்கார பெண் போலீசிற்கு தகவல் செய்ய அதனால் போலீஸ் அந்த இடத்திற்கு வருகின்றனர். கண்ணனும் ஐஸ்வர்யாவும் தேவையில்லாமல் கேஸில் சிக்க இருக்கின்றனர். அதனால் குடும்பத்தில் இதனால் பெரிய பிரச்சனைகள் வர இருக்கிறது. அடுத்து வரப்போகும் எபிசோடுகள் இது பற்றி காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.