இயற்கையாகவே கருவுறும் முல்லை – மகிழ்ச்சியில் குடும்பத்தினர்! பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த ட்விஸ்ட்!
தற்போது தான் முல்லை செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையில் தோல்வியுற்றார். இவ்வளவு பெரிய தொகையை செலவழித்தும் சிகிச்சை தோல்வியடைந்து விட்டதே என குடும்பத்தினர்கள் கவலையில் இருந்த நேரத்தில் முல்லை இயற்கையாகவே கருவுறும்படியான ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது. கடந்த சில வாரங்களாகவே முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை வெற்றி பெறுமா என்பது தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால், இது முல்லைக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த சிகிச்சைக்காக மட்டுமே குடும்பத்தினர் 5 லட்ச ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். அதாவது தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி வீடு கட்டும் பிளானை பாதியிலேயே நிறுத்தி இந்த சிகிச்சையை செய்தனர்.
ஷூட்டிங்க் ஸ்பாட்டில் “பாண்டியன் ஸ்டோர்ஸ்” ஐஸ்வர்யா செய்த காரியம் – கடுப்பான இயக்குனர்!
ஆனால் இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை முதல் சிகிச்சையிலேயே அனைவருக்கும் வெற்றியை கொடுத்து விடாது. ஒருமுறை இந்த சிகிச்சையில் தோல்வியடைந்து விட்டால் மீண்டும் 5 லட்சம் கட்டி முதலில் இருந்து சிகிச்சையை தொடங்க வேண்டும். ஒரு முறை ஐந்து லட்சத்தை தயார் செய்யவே குடும்பத்தில் உள்ள அனைவரும் மிகவும் கஷ்டப்பட்டிருக்கிறார்கள். மீண்டும் ஐந்து லட்சத்தை புரட்டுவது என்பது குடும்பத்தினர்களுக்கு முடியாத ஒன்றாகும்.
Exams Daily Mobile App Download
குடும்பத்தினருக்கு இவ்வளவு பெரிய கடன் சுமையை கொடுத்து விட்டோமே என முல்லை மன அழுத்தத்தில் இருக்கிறார். இதனால் அனைவரும் முல்லையை தேற்ற முயற்சிக்கின்றனர். இந்த நேரத்தில் தான் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாளுக்காக குடும்பத்தில் உள்ள அனைவரும் பாக்கியாவின் வீட்டிற்கு செல்கிறார்கள். பாக்கியாவின் வீட்டுக்கு சென்ற பிறகாவது முல்லை மனசு மாறுவார் என நம்பி முல்லையை அழைத்துக் கொண்டு செல்கிறார்கள். இதற்குப் பிறகு முல்லை இயற்கையாகவே கருவுறும் படியாக ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.