நெஞ்சுவலியால் மருத்துவமனையில் மூர்த்தி, வீட்டிற்கு மீண்டும் வந்த கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

0
நெஞ்சுவலியால் மருத்துவமனையில் மூர்த்தி, வீட்டிற்கு மீண்டும் வந்த கதிர் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த எபிசோட்!
நெஞ்சுவலியால் மருத்துவமனையில் மூர்த்தி, வீட்டிற்கு மீண்டும் வந்த கதிர் - 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அடுத்த எபிசோட்!
நெஞ்சுவலியால் மருத்துவமனையில் மூர்த்தி, வீட்டிற்கு மீண்டும் வந்த கதிர் – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ அடுத்த எபிசோட்!

கடந்த சில நாட்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட தொடர் சண்டையால் கதிரும், முல்லையும் வீட்டை விட்டு வெளியேறியதை அடுத்து தற்போது மூர்த்திக்கு ஏற்படும் நெஞ்சு வலியால் கதிர் வீட்டுடன் வந்து இணைவது போல் அடுத்தடுத்த எபிசோடுகளில் கதைக்களம் அமைக்கப்பட உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தையும், கூட்டு குடும்ப கதையை அழகாக வெளிப்படுத்தும் விதமாக இயக்கி நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் பல நூறு எபிசோடுகளை கடந்தும் அதிக பார்வையாளர்களை கொண்டு ரேட்டிங்கில் நல்ல இடத்தை பெற்று வருகிறது. சில நாட்கள் டல் அடித்த சமயத்திலும் அதே கதையை ஜவ்வாக இழுக்காமல் சட்டுன்னு வேற ட்ராக்கில் நகர்ந்து ட்விஸ்ட் கொடுப்பதில் இந்த சீரியல் இயக்குனர் வல்லவர் என்றே சொல்ல்லாம். அந்த அளவுக்கு எப்போ? எப்படி? கதை மாறும் என யாராலும் யூகிக்க முடியாது.

வெண்பாவிற்கு சாரதியுடன் வேகமாக திருமணம் செய்து வைக்க திட்டமிடும் ஷர்மிளா – சீரியலில் அடுத்த திருப்பம்!

இப்படி இருக்கையில் சில நாட்களாக முல்லையின் வயிற்றில் கரு செயற்கை முறையில் வளர எண்ணி அதற்காக பல லட்சம் செலவுகளையும் செய்து டிரீட்மென்ட் எடுத்தனர். அப்போது வெறும் பேப்பரில் தீ கங்கு விழுவது போல் சண்டை தொடங்கியது. நாளடைவில் பல லட்சம் செலவு செய்து பயனில்லாமல் போனதை காரணம் காட்டி ஹேமாவால் காட்டுத் தீ போல் பிரச்சனை வீட்டில் பற்றி எரிந்தது. அப்போது தான் ஒரு கட்டத்தில் அவமானம் தாங்காமல் கதிர், தனது மனைவி முல்லையுடன் வீட்டை விட்டு வெளியேறுவதாக கிளம்பினார். குடும்பத்தில் பலரும் தடுத்து ஒரு பயனில்லை.

Exams Daily Mobile App Download

அந்த சமயம் தான் முல்லையின் அம்மாவும், அப்பாவும் வந்து மருமகன் கதிரிடம் தங்களுடன் வீட்டுக்கு வருமாறு கெஞ்சினார்கள். அதற்கு ஒத்துழைத்த கதிர் முல்லையின் வீட்டுக்கு சென்றார். அந்த சமயம் வீட்டில் தனம் அண்ணி உட்பட எல்லாரும் மூர்த்தியிடம் பேசி கதிரை போ வேண்டாம்னு சொல்லுங்க என சொல்ல, அதற்கு அவர் கதிர் முடிவெடுத்த படியே போகட்டும் என கூறிவிட்டு அங்கிருந்து நகர்கிறார். அதன் பிறகு இரவு வீட்டுல உள்ள எல்லோரும் உறங்கும் நேரம் மூர்த்திக்கு திடீரென நெஞ்சு வலி வர ஹாஸ்ப்பிட்டலில் சேர்க்கின்றனர். இந்த தகவலை அறிந்த கதிரும் முல்லையும் மூர்த்தியை பார்க்க செல்கின்றனர். இதை வைத்து பார்க்கும் போது கதிர் தனது அண்ணன் மூர்த்திக்காக மீண்டும் வீட்டுக்குள் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!