‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – கோலாகலமாக நடந்த கடைதிறப்பு விழா!
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தற்போது வரும் எபிசோடுகளில் கடை திறக்க முடியாமல் ஆகிவிட்டதால் போராட்டம் நடத்துவது போல் காட்சிகள் வரும் நிலையில், அடுத்து வரும் எபிசோடுகள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
கடை திறப்பு விழா:
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சமீப காலமாக அடுத்தடுத்து பல பிரச்சனைகள் வருவது போல் காட்சிகள் வந்த வண்ணம் உள்ளது. இனி வரும் நாட்களில் அந்த அனைத்து பிரச்சனைகளும் முடிந்து மகிழ்ச்சியான பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினரை ரசிகர்கள் காண உள்ளனர். தற்போது அவர்கள் நடந்து வரும் பழைய பாண்டியன் ஸ்டார்ஸ் கடையில் இடம் பத்தாமல் இருப்பதால் புதிதாக ஒரு கடையை கட்டி அதனை திறக்க இருந்தனர்.
ஆனால் கடை திறப்பு விழாவிற்கு முன்னதாக யாரும் எதிர்பாராத வகையில் ஒரு பிரச்சனை வெடித்தது. ஜனார்த்தனன் கடையின் கண்ணன் மீது பணத்தை திருடியதாக பழி போட்டவனை கதிர் அடிக்க, அவர்கள் மீண்டும் கண்ணனை அடிக்க என்று மாற்றி மாற்றி சண்டை நடந்தது. அந்த பையனின் உறவுக்காரர் தான் அரசு அலுவகத்தில் வேலை செய்கிறார். பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு உரிய அரசு அனுமதி பெறவில்லை என்று கூறி புது கடையை சீல் வைத்து விட்டார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் அனைவரும் போராட்டம் நடத்த தொடங்கி விட்டனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் குமரனின் நெகிழ்ச்சியான பதிவு – உருகும் ரசிகர்கள்!
இது போன்ற காட்சிகள் தான் தற்போது வந்து கொண்டிருக்கும் நிலையில், இனி வரும் நாட்களில் அனைத்து பிரச்சனைகளும் முடிந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் புது கடை திறப்பு விழா நடக்க இருக்கிறது. இதற்கான ஷூட்டிங் காஞ்சிபுரத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடந்துள்ளது. அப்போது பொது மக்கள் அங்கு கூட்டமாக கூடி பிரபலங்களை காண முண்டியடித்துக் கொண்டு நின்றுள்ளார். மேலும், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து பல புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதனால் விரைவில் இந்த காட்சிகள் வர இருப்பதை அறிந்து ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.