மீண்டும் ஹோட்டலை நடத்த தொடங்கிய கதிர் & முல்லை .. பாண்டியன் ஸ்டோர்ஸ் இனி வரும் திருப்பங்கள்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இது வரை நடந்துள்ள அனைத்தும் தற்போது நன்மையில் தான் முடிந்துள்ளது. கதிர் மற்றும் முல்லை இருவரும் மீண்டும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்கு வந்துள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
கூட்டு குடும்ப கதையில் உள்ள பல சூழ்நிலைகளையும் மிக அழகாக தற்போதுள்ள தலைமுறையினருக்கு புரியும் வகையில் கொண்டு வரப்பட்ட சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். மிகவும் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் மற்றவர்களின் சூழ்ச்சி காரணமாக பிரிவு ஏற்பட்டது. கதிர், முல்லைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வாங்கிய ரூ.5 லட்சம் பணத்தை திருப்பி கொடுத்து விட்டு தான் வீட்டிற்கு வருவேன் என்று கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார்.
Follow our Instagram for more Latest Updates
தனியாக சென்ற கதிரும், முல்லையும் பல போராட்டங்களுக்கு பிறகு ஹோட்டல் ஒன்றை தொடங்குகின்றனர். அதில் மெல்ல மெல்ல நல்ல பெயரை சம்பாதித்து, தேவையான லாபத்தையும் பெறுகின்றனர். இந்த நிலையில், எதேர்சையாக ஒரு சமையல் போட்டியில் கதிரும், முல்லையும் கலந்து கொள்கின்றனர். இந்த போட்டியில் ஜெயித்து ரூ.10 லட்சம் பணத்தையும் ஜெயித்து விட்டனர். அதன்பிறகு, மீண்டும் தங்களது குடும்பத்துடன் சேர்ந்து விடுகின்றனர்.
ராகினி திருமணத்தில் திடீரென நேர்ந்த திருப்பம் – “தமிழும் சரஸ்வதியும்” சீரியலில் Unexpected ட்விஸ்ட்!
Exams Daily Mobile App Download
இந்நிலையில், கதிர் இனி பாண்டியன் ஸ்டோர்ஸ் கடைக்கு தான் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கதிரும் முல்லையும் தங்களது ஹோட்டலுக்கு சென்று வேலை பார்க்க இருப்பது போல் காட்சிகள் வர இருக்கிறது. இதனால், இனி கதையில் கூடுதல் சுவாரஸ்யம் ஏற்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.