மீண்டும் குடும்பத்தினரிடம் இணையும் கதிர் & முல்லை – அதிரடி திருப்பங்களுடன் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் எப்போதும் ஒற்றுமையாக இருந்த குடும்பத்தினர், சில மாதங்களுக்கு முன்பு குடும்பத்தில் வந்த குழப்பத்தின் காரணமாக பிரிந்து விட்ட நிலையில், தற்போது மீண்டும் ஒன்றாக இணையவிருக்கின்றனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த சில வாரங்களாக ஒரே பிரச்சனையாக சென்று கொண்டிருக்கிறது. முல்லையின் மருத்துவ செலவிற்காக வாங்கிய பணத்தை தான் கொடுக்கும் வரை வீட்டிற்கு வர மாட்டேன் என்று சொல்லி கதிர் முல்லையை அழைத்து கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறார். இதனால் மனம் ஒடிந்து விட்ட மூத்த அண்ணன் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்து ஆபரேஷன் செய்யும் அளவிற்கு ஆகிவிட்டது. இப்படி அடுத்தடுத்து வரும் பிரச்சனைகளால் அனைவரும் கவலையில் இருக்கின்றனர்.
இதைவிட, மீனாவும், ஐஸ்வர்யாவும் சண்டை போடுவதை தான் யாராலும் தாங்க முடியவில்லை. எப்படியாவது கடனை அடைக்க வேண்டும் என்று போராடி கொண்டிருக்கும் கதிர், புதிதாக ஹோட்டல் தொழிலை தொடங்க அங்கும் புது வித பிரச்சனைகள் வருகிறது. இப்படி இருக்கையில், மூர்த்தி இரவு தூங்கும் போது லட்சுமி அம்மா அவரது கனவில் வருகிறார். நீ எப்படி பா இருக்க? உடம்புக்கு ஒன்னும் இல்லையே ? என்று கேட்கிறார். அதுலாம் நல்லா இருக்கேன் அம்மா என்று சொல்கிறார்.
தமிழகத்தில் செப்.1ம் தேதி முதல் சுங்க கட்டணத்தில் அதிரடி உயர்வு – முக்கிய அறிவிப்பு இதோ!
குடும்பத்தில் தான் அடுத்தடுத்து ஒரே பிரச்சனையாக இருக்கிறது. கதிர் தனியாக சென்று விட்டான் என்று சொல்கிறார். அப்போது, லட்சுமி அம்மா, வீட்டை மாத்துங்க , எல்லாம் சரி ஆகிவிடும் என்று சொல்கிறார். வீடு காட்டுவதாக சொன்னது என்ன ஆச்சு என்று லட்சுமி அம்மா கேட்க, இனி தான் அத பத்தி யோசிக்கணும் என்று மூர்த்தி சொல்கிறார். இதனால் இவர்கள் இனி புது வீட்டிற்கு போவது போல் கதை மாற உள்ளது. அதற்குள் கதிரின் தொழிலும் நல்ல முன்னேற்றம் அடைந்து அவர்கள் கடனை அடைத்து, அனைவரும் ஒரே வீட்டில் இருப்பது போல் கதை மாற உள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்