‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்திற்காக தனம் எடுக்கும் புதிய அவதாரம் – ப்ரோமோ ரிலீஸ்!
கதிர் சென்றதும் உதவிக்கு ஆள் இல்லாமல் தவித்து நிற்கும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மளிகை கடைக்கு ஆதரவாக தனம் களமிறங்குவது போல ஸ்வாரசியமான ப்ரோமோ ஒன்று வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்
தமிழ் சின்னத்திரையில் குடும்பப்பாங்கான கதைக்களத்திற்கு பெயர் போன ஒரு முக்கியமான சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் கிட்டத்தட்ட 940 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இந்த ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சில எதிர்பாராத திருப்பங்கள் நடைபெற்றுள்ளது. அந்த வகையில் இதுவரைக்கும் வெளியாகி இருக்கும் கதைக்களத்தில், முல்லைக்கு செய்த ட்ரீட்மெண்ட் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் பெரிய குழப்பத்தை உண்டாக்க கதிர் ஒரு அதிரடியான முடிவு எடுத்து முல்லையை அழைத்து கொண்டு தனியே பிரிந்து செல்கிறார்.
கோபியை வீட்டை விட்டு வெளியே போகச் சொல்லும் செழியன் – ப்ரோமோ ரிலீஸ்!
இப்போது கதிரின் பிரிவை ஏற்றுக்கொள்ள முடியாத மூர்த்திக்கு நெஞ்சுவலி ஏற்பட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார். தொடர்ந்து சிகிச்சை முடித்து வரும் மூர்த்தியால் கடைக்கு சென்று முன்பு போல வேலை செய்ய முடியவில்லை. மறுபக்கத்தில் கதிர், முல்லை இருவரும் தனியாக வீடு எடுத்து புதிய வாழ்க்கையை துவங்குகின்றனர். கதிர் தனக்காக ஹோட்டலில் ஒரு வேலையையும் தேடிக்கொள்கிறார். இப்போது கதிர் மற்றும் மூர்த்தி இல்லாததால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை ஒரு ஆளாக நடத்துவதற்கு ஜீவா போராடிக்கொண்டிருக்கிறார்.
Exams Daily Mobile App Download
அதனால், ஜீவாவுக்கு ஆதரவாக பாண்டியன் ஸ்டோர்ஸ் கடை பொறுப்பை தனம் ஏற்பது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது. அந்த ப்ரோமோவில், ஜீவா தனி ஆளாக நின்று கடையில் கஷ்டப்படுகிறான் என மூர்த்தி வருத்தப்பட கடை பொறுப்பை தன்னிடம் விடுமாறு கூறி விட்டு கடைக்கு புறப்படுகிறார் தனம். கடையில் வைத்து அத்தனை வேலைகளையும் இழுத்து போட்டு செய்யும் தனத்தை பார்க்கும் ஒருவர் ‘தனம் இப்போ மட்டுமா வேலை செய்யுது. கதிர், ஜீவா சின்ன பசங்களா இருக்கும் போது இருந்து கடையை கவனிச்சு, வீட்ட பாத்து, மாமியாரையும் கவனிச்சா’ என்று பெருமையாக கூறுவது போல சில காட்சிகள் இடம்பிடித்துள்ளது.