“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீரென கர்ப்பமாகும் முல்லை – அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

0
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீரென கர்ப்பமாகும் முல்லை - அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீரென கர்ப்பமாகும் முல்லை - அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் திடீரென கர்ப்பமாகும் முல்லை – அடுத்தடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை பல்வேறு ரசிகர்கள் தொடர்ந்து பார்த்து வருகின்றனர். இந்த சீரியலில் தற்போது விறுவிறுப்பான, பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகின்றன. தற்போது யாரும் எதிர்பார்க்காத பல திருப்பங்கள் நிறைந்த ப்ரோமோ ஓன்று வெளியாகி உள்ளது.

வரப்போகும் ட்விஸ்ட்:

விஜய் டிவியில், எத்தனையோ சீரியல்கள் ஒளிபரப்பாகி கொண்டிருந்தாலும் பாண்டியன் ஸ்டோர்ஸுக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. அந்த சீரியலில் வரும் கதாபாத்திரங்களை தங்கள் வீட்டில் உள்ளவர்கள் போன்று பார்க்கிறார்கள் ரசிகர்கள். இந்த சீரியல் கூட்டு குடும்பத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடரில் ஸ்டாலின், சுஜிதா, குமரன் தங்கராஜன், வெங்கட் ரங்கநாதன், சித்ரா, ஹேமா ராஜ்குமார், சரவணன் விக்ரம் மற்றும் பலரும் நடித்துள்ளனர். இந்த சீரியலில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஜோடி முல்லை-கதிர் ஜோடி தான். இந்த ஜோடிக்கு என்று தனியாக பல ரசிகர்கள் உள்ளனர். கதிர் – முல்லை ஜோடியின் ரொமான்ஸ், சீரியலை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றது.

‘நக்ஷத்ராவை காப்பாற்றவில்லை என்றால் சித்ராவின் நிலைமை தான் இவருக்கும்’ – கதறி அழுத ஸ்ரீ நிதி!

இதனால், சீரியல் வெகு சீக்கிரமே ரசிகர்களின் ஆதரவுடன் ஹிட் அடித்தது. இந்நிலையில், எதிர்பாராத விதமாக முல்லையாக நடித்த வி.ஜே சித்ரா திடீரென இறந்து விட்டார். முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவிற்கு பிறகு, முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார். இந்த சீரியலில் சில மாதங்களுக்கு முன்பு கதையின் விறுவிறுப்பை ஏற்றுவதற்கு கண்ணன் – ஐஸ்வர்யா கல்யாணம், மூர்த்தியின் அம்மா இறப்பு, புதிய சூப்பர் மார்கெட் திறப்பு என்ற நோக்கில் எபிசோடுகள் நகர்ந்து வந்தது. இதையடுத்து கதிர்-முல்லைக்கு குழந்தை பிறக்குமா? பிறக்காதா? என்று தற்போது எபிசோடுகள் ஒளிபரப்பட்டு வருகிறது.

Exams Daily Mobile App Download

முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற விஷயம் குடும்பத்தினர் அனைவருக்கும் தெரியவர, செயற்கை முறையில் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என குடும்பத்தினர் முடிவு எடுத்தனர். இந்த சிகிச்சையை மேற்கொள்ள 5 லட்ச ரூபாய் தேவைப்படும் என மருத்துவர்கள் கூறினார்கள். மேலும் இந்த பணத்தை மூர்த்தி குடும்பத்தினர் ரெடி செய்து விட்டனர். இதையடுத்து செயற்கை முறை சிகிச்சை முல்லைக்கு நடைபெற்றது. இருப்பினும் எதிர்பாராத விதமாக அந்த சிகிச்சை தோல்வியை தழுவியது. இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமே மனம் உடைந்து விட்டனர். தற்போது இயற்கையாகவே முல்லை கர்ப்பமாகி உள்ளதாகவும், அவருக்கு குழந்தை பிறந்து உள்ளதாகவும் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!