பழையபடி வீட்டில் சண்டை போட ஆரம்பிக்கும் மீனா – கோவத்தில் ஜீவா! ப்ரோமோ ரிலீஸ்!
ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடிவிட்டு வீட்டிற்கு வந்ததுமே மீனா சண்டை போட ஆரம்பித்துவிடுகிறார். ஜீவாவும் மீனாவை சமாதானப்படுத்த முயற்சிக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் ஜீவா மீனாவை திட்டுவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லைக்கு மறுபடியும் செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையை தொடங்குவார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர். முல்லையால் இயற்கையாக கருவுற முடியாது என்பதால் 5 லட்சம் செலவு செய்து முல்லைக்கு செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சையை செய்தனர். சிகிச்சையை தொடங்கும் போதே மருத்துவர் குடும்பத்தினரிடம் கூறினார். அதாவது, இந்த செயற்கை முறை கருவுறுதல் சிகிச்சை பெரும்பாலும் வெற்றியடையாது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை அம்மாவாகும் அழகான தருணம் – ரசிகர்கள் உற்சாகம்!
ஆனாலும், குடும்பத்தினர்கள் முல்லைக்காக தெரிந்தவர்கள் அனைவரிடமும் கடன் வாங்கி சிகிச்சையை மேற்கொண்டனர். ஆனால், முல்லைக்கு இந்த சிகிச்சை வெற்றியை கொடுக்கவில்லை. மறுபடியும் சிகிச்சை எடுக்க வேண்டுமென்றால் பழையபடி 5 லட்சம் கட்ட வேண்டும். வீட்டிற்கு இவ்வளவு பெரிய கடனை கொடுத்துவிட்டோம் என முல்லை மிகவும் மன அழுத்தத்தில் இருந்தார். முல்லையின் மனதை தேற்ற குடும்பத்தினர்கள் முல்லையை பாக்கியாவின் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.
Exams Daily Mobile App Download
பாக்கியாவின் வீட்டில் ராமமூர்த்தி தாத்தாவின் பிறந்தநாள் விழாவை கொண்டாடி முடித்ததும் மீண்டும் குன்னக்குடிக்கு சென்றுவிட்டனர். வீட்டிற்க்கு வந்ததுமே மீனா பழையபடி சண்டை போட ஆரம்பித்துவிட்டார். அதாவது, மூர்த்தியிடம் மீனா கொஞ்சம் பணம் கேட்டிருக்கிறார். எதற்காக தேவையில்லாமல் செலவு செய்ய வேண்டும் என மூர்த்தி கூறியதும் மீனாவிற்கு தலைக்கு மேல் கோவம் வருகிறது. அதாவது, முல்லைக்காக மட்டும் இவ்வளவு செலவு செய்தீர்கள். எனக்காக மட்டும் செலவு செய்ய தயங்குகிறீர்கள் என கூறி மீனா சண்டை போடும்படியான ப்ரோமோ வெளியாகியுள்ளது.