‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவை தன் பக்கம் இழுத்த மாமனார் – சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

0
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவாவை தன் பக்கம் இழுத்த மாமனார் - சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?
'பாண்டியன் ஸ்டோர்ஸ்' ஜீவாவை தன் பக்கம் இழுத்த மாமனார் - சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவை தன் பக்கம் இழுத்த மாமனார் – சீரியலில் அடுத்து நடக்கப்போவது என்ன?

அண்ணன் தம்பிகளின் பாசத்தை உணர்த்தும் மெகா ஹிட் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். ஒவ்வொரு நாளும் பல சுவாரஸ்யங்களை கொண்டுள்ள நிலையில் திடீரென ஜீவாவின் மாமனார் ஜனார்த்தனனிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இந்த உடல்நல பாதிப்பை காரணம் காட்டி அவரது சூப்பர் மார்க்கெட்டை கவனிக்கும் பொறுப்பை கொடுத்து அவரது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

ஜனார்த்தனன் போடும் திட்டம் :

விஜய் டிவியில் கடந்த 3 வருடம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மெகா சீரியலில் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மிகவும் அழகாக இயக்கி வருகிறார் இயக்குனர் சிவா சேகர். சிறிய பெட்டி கடையில் வாழ்க்கையை தொடங்கிய குடும்பம் தற்போது மிகப்பெரிய சூப்பர் மார்க்கெட் கட்டும் அளவிற்கு வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியை பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், தம்பிகளின் ஒருவர் ஜீவாவின் மாமனாராகிய ஜனார்த்தனன் சொந்தமாக ஒரு சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அதில் தன் மருமகன் ஜீவாவை அமர வைக்க வேண்டும் என்பது பல நாள் கனவு.

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – ராதிகாவிடம் வசமாக சிக்கிய கோபி!

ஒரு கணம் அவர் அவளோ நல்ல மாமனாரா? என்று நினைக்கும் பார்வையாளர்களுக்கு இது உண்மை இல்லை அண்ணன் தம்பிகளை பிரிக்க துடிக்கும் ஒருவிதமான சூழ்ச்சி என்பது அப்பட்டமாக தெரியும். அந்த வகையில் திடீரென ஜனார்த்தனனிற்கு மாரடைப்பு ஏற்பட்டதால் அவருக்கு ஓய்வு தேவை என டாக்டர் கூறினார். இதை காரணமாக பயன்படுத்திய மாமனார் ஜீவாவை அழைத்து “மாப்பிள்ளை இனிமே நீங்க தான் நம்ம கடைய பாத்துக்கனும்” என்று சொன்னதற்கு மறுப்பு சொல்ல முடியாமல் ஒப்புக்கொண்டார். திடீரென நேற்றைய எபிசோடில் லட்ச கணக்கில் பணத்தை எடுத்து ஜீவாவிடம் ஜனார்த்தனன் கொடுத்து வீட்டுக்கு எடுத்து போக சொல்கிறார். ஜீவாவும் புரியாமல் எடுத்து சென்று மீனாவிடம் கொடுத்தார். அதற்கு மீனா இந்த மாதிரி உங்க வாழ்நாள்ள என்னைக்காவது சம்பளம் வாங்கி இருக்கீங்களா என்று குத்தி காமிக்கிறாள்.

மேலும், ஐஸ்வர்யா ஜீவா இடத்தில் இருந்து எல்லா வேலையும் பார்த்து கொள்வதால் ஜீவா இல்லை என்ற குறை அங்கு ஏற்படவில்லை. ஆனாலும் ஒரு முறை அண்ணனிடம் நான் நம்ம கடைக்கு வரேன் என்று கேட்போம் என நினைத்து ஜீவாவும் மூர்த்தியிடம் கேட்க அதற்கு மூர்த்தியும் நீ கொஞ்சம் நாளைக்கு அங்க இருந்து கடையை பார்த்துக்கோ என்று சொல்கிறார். இதனால் மனமுடைந்த ஜீவா மொத்த குடும்பமும் தன்னை மறந்து விட்டதாக எண்ணி வருத்தம் கொள்கிறார். பணம் வீட்டில் உள்ள நேரத்தில் எதிர்பாராத விதமாக ஐஸ்வர்யாவிடம் கண்ணன் காலேஜ் ஃபீஸ் கட்ட வேண்டும் என புலம்புகிறார். இதெல்லாம் வைத்து பார்க்கும் போது கண்டிப்பாக பணத்தை வைத்து ஒரு பூகம்பம் வெடிக்கப் போவதாக எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!