தனது கர்ப்பத்தை உறுதி செய்த முல்லை, மகிழ்ச்சியில் கதிர் – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்த எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை குழந்தை இல்லாமல் கஷ்டப்பட குடும்பமே சேர்ந்து முல்லைக்கு துணையாக இருக்கின்றனர். முல்லைக்கு டிரீட்மென்ட் செய்ய பாசிட்டிவாக செய்தி வருகிறது. அதனால் கதிர் மற்றும் குடும்பமே சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல திருப்பங்களுடன் சென்று கொண்டிருக்கிறது. முல்லை கதிரை சுற்றியே கதை சென்று கொண்டிருக்கும் நிலையில் முல்லைக்கு நல்லபடியாக குழந்தை பிறக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக இருக்கிறது. முல்லை பல கஷ்டங்களை தாண்டி குழந்தைக்கு டிரீட்மென்ட் எடுக்க லட்ச கணக்கில் கடன் வாங்கி மூர்த்தி முல்லையின் சந்தோசத்தை பார்க்க நினைக்கிறார். இதற்கிடையே மீனாவிற்கு பணம் கொடுத்தது பிடிக்காமல் இருக்கிறது.
அதனால் அவர் அடிக்கடி குத்தி காட்டி பேசி வருகிறார். இது ஒரு புறம் இருக்க கதிர் பணம் அதிகமாக செலவானதை நினைத்து வருத்தப்படுகிறார். கடன் வாங்கியது எல்லாம் தெரியவர அதை எப்படி குடும்பம் தாங்கும் என தெரியாமல் இருக்கிறார். இது ஒருபுறம் இருக்க மறுபக்கம் முல்லையின் சந்தோசமான முகத்தை பார்த்து கடன் வாங்கினால் தப்பில்லை என நினைக்கிறார். இப்படி கதை சென்று கொண்டிருக்க முல்லையை பரிசோதனை செய்த டாக்டர் முல்லைக்கு நல்ல ரிசல்ட் இருப்பதாக சொல்கிறார்.
Exams Daily Mobile App Download
அப்போது முல்லை நான் கர்ப்பமாகிவிட்டேனா என கேட்க அதற்கு இன்னும் 2 வாரங்கள் காத்திருக்க வேண்டும் என சொல்கிறார். அதை கேட்டு குடும்பத்தில் அனைவரும் சந்தோசப்படுகின்றனர். இந்நிலையில் இனி வர போகும் எபிசோடுகளில் முல்லை தனது கர்பமானதை உறுதி செய்கிறார். அதை முதலில் கதிரிடம் சொல்ல வேண்டும் என பல கனவுகளுடன் இருக்க இனி வரும் எபிசோடுகளில் அழகான காட்சிகள் வர இருக்கிறது. அதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் கதைக்களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.