“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், மூர்த்தி வீட்டிற்கு வரும் ஐஸ்வர்யா – வெளியான படப்பிடிப்புத்தள வீடியோ!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனும் ஐஸ்வர்யாவும் காதல் திருமணம் செய்துக் கொண்டதால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகின்றனர். இந்நிலையில் அவர்கள் எதிர் வீட்டில் குடி வருகின்றனர். அடுத்து வரும் எபிசோட் குறித்த படப்பிடிப்பு தள வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், கண்ணன் ஐஸ்வர்யாவை கஸ்தூரி திட்டமிட்டு மூர்த்தியின் எதிர் வீட்டில் தங்க வைக்கின்றனர். இதனால் இருவருக்கும் அடிக்கடி சண்டை நடக்கும் என எதிர்பார்க்கின்றனர். ஆனால் அவர்கள் எதிர் வீட்டிற்கு வந்து எப்போதும் தனது அண்ணன் அண்ணியை பார்க்கலாம் என சந்தோஷத்தில் இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் தனமும் எங்கேயோ அவன் இருப்பதற்கு இங்கேயே கண் முன்பு இருந்தால் நல்லது என நினைக்கிறார். ஆனால் அவர் அதை வெளியே காட்டி கொள்ளாமல் இருக்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் அம்மா மற்றும் மகளின் புது ரீல்ஸ் வீடியோ – ரசிகர்கள் உற்சாகம்!
இந்நிலையில் இன்றைய எபிசோடில் கஸ்தூரி குடும்பத்திற்குள் சண்டை முட்டிவிட வர ஆனால் மூர்த்தி யாரு எங்கே வந்தால் எனக்கு என்ன என் வீட்டிற்குள் வர தான் அனுமதி வேண்டும் என சொல்லி சமாளிக்கிறார். கதிர் ஜீவா தனம் கண்ணன் எதிர் வீட்டில் இருப்பதை நினைத்து சந்தோஷத்தில் இருக்கின்றனர். அண்ணி பேசாமல் இருந்தாலும் கண்ணன் பேசி கொண்டே இருக்கிறார். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோட் குறித்த புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.
நடிகை சமந்தா விவாகரத்திற்கு இது தான் காரணம் – முதன் முதலாக மனம் திறந்த தயாரிப்பாளர்!
அதில் ஐஸ்வர்யா மூர்த்தி வீட்டின் பின் புறத்தில் நின்று பேசுவது போல காட்டப்படுகிறது. அவர் எதற்காக அங்கே சென்றார். ஒரு வேலை எதாவது பிரச்சனை வந்திருக்குமா என இந்த வீடியோ பார்த்த ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு கூடி உள்ளது. மேலும் அடுத்து பல திருப்பங்களுடன் கதை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இன்னும் 2 நாட்களில் தனத்திற்கு குழந்தை பிறக்க இருக்கிறது எனவே கண்ணன் ஐஸ்வர்யாவை வீட்டிற்குள் சேர்த்துக் கொண்டிருக்கின்றனரா என கேள்வி எழுந்துள்ளது.