‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடையை இடிக்கப்போகும் அதிகாரிகள் – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கடை திறப்பு விழாவிற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கடையை இடிக்க திட்டமிட்டு இருப்பதாக கடையில் இருக்கும் போலீஸ் தகவல் சொல்கிறார் அதை கேட்டு அண்ணன் தம்பிகள் அதிர்ச்சியில் அடைகின்றனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பமே இணைந்து தங்களது உழைப்பை எல்லாம் போட்டு கடை கட்டி இருக்கின்றனர். கடைக்கு சொந்தங்களை எல்லாம் அழைத்து திறப்பு விழா நடத்த திட்டமிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் கடையை சில அரசு அதிகாரிகள் சீல் வைக்கின்றனர். அதற்கான சரியான காரணம் எதுவும் தெரியாமல் இருக்கிறது. காரணம் என்ன என தெரிந்தால் கூட அதற்கான நடவடிக்கைகள் எடுக்கலாம் ஆனால் அது என்ன என சொல்லாமல் மூர்த்தி, ஜீவா கதிரை அலைய வைக்கின்றனர்.
திடீரென நிறுத்தப்பட்ட விஜய் டிவியின் புதிய சீரியல் – காரணம் இதுவா? ரசிகர்கள் ஷாக்!
மேலும் புது கடைக்கு தேவையான சரக்குகள் வர அதை எங்கே வைப்பது என தெரியாமல் கதிர் இருக்கிறார். இன்றைய எபிசோடில் மழையால் பாதி சரக்குகள் நனைந்து விடுகின்றன. அதை சரி செய்ய இரவு என பார்க்கலாம் கதிர் சென்று இருக்கிறார். கண்ணனை அடித்தவர்கள் தான் கடையை மூட காரணம் என தெரிந்தும் அது பற்றி சொல்லமால் இருக்க ஐஸ்வர்யா இது பற்றி கதிரிடம் சொல்கிறார். அதனால் கதிர் என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறார்.
விஜய் டிவி ‘குக் வித் கோமாளி’ சீசன் 3 பரத்தை தாக்கிய போட்டியாளர்கள் – வைரலாகும் புகைப்படம்!
இந்நிலையில் அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் கடையை சீல் வைத்து பாதுகாக்க நியமித்து இருக்கும் போலீஸ்காரர் மூர்த்தியிடம் நீங்க அந்த அலுவலகரை பகைத்து கொண்டு இருக்கீங்க, உங்களை கடையை இடிக்க போவதாக பேசிக்கிட்டாங்க எனக்கு தெரிந்தது இவ்வளவு தான் என சொல்கிறார். அதை கேட்டு அண்ணன் தம்பிகள் அதிர்ச்சி அடைகின்றனர்.