‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடை பிரச்சனைக்கு காரணமான நபரை கண்டுபிடித்த கண்ணன் – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தற்போது கட்டப்பட்டுள்ள புதிய கடைக்கு எதிராக சில பிரச்சனைகள் போய் கொண்டிருக்கும் சமயத்தில், இதற்கு பின்னால் இருந்து இயக்கும் நபர் யார் என்கிற உண்மையை கண்ணன் அறிந்து கொள்ள ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மேலும் அதிகரித்துள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
சமீப காலமாக புதிய கடைக்கு உருவான பிரச்சனைகளை மையமாக வைத்து ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் கதைக்களம் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அண்ணன், தம்பிகளாக இணைந்து கட்டிய கடை சரியான அனுமதி இல்லாமல் கட்டப்பதாக கூறி அதிகாரிகள் அதற்கு சீல் வைத்து செல்கின்றனர். இப்போது இந்த கடையை மீட்பதற்காக அரசு அலுவலகத்திற்கு செல்லும் கதிர் மற்றும் ஜீவா இருவரும் ஒரு அதிகாரியால் மிரட்டப்படுகின்றனர்.
இதற்கிடையில் இது தான் சரியான சந்தர்ப்பம் என ஜனார்தனனும் தனது பங்கிற்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தை பழிவாங்க திட்டமிடுகிறார். இப்போது இது சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் உருவான பிரச்சனைக்கு யார் காரணம், அந்த அதிகாரியின் பின்னால் இருந்து இயக்குவது யார் என்கிற குழப்பங்கள் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
‘பிக் பாஸ்’ அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அபிநய்? இந்த வார எலிமினேஷன்! ஷாக் ரிப்போர்ட்!
இந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடைபெற்று வரும் அத்தனை பிரச்சனைக்கும் காரணம் யார் என்ற விவரம் கண்ணனுக்கு தெரிய வருகிறதை போல அடுத்தகட்ட கதைக்களம் வெளியாக இருக்கிறது. அதாவது, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஏற்கனவே ஜனார்த்தனன் கடையில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் கதிர் அடித்த ஒருவரது அப்பா தான் கடைக்கு சீல் வைத்த அந்த முனிசிபல் அதிகாரி. இந்த விஷயத்தை கண்ணன் தெரிந்து கொள்ள இப்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடை எப்படி மீட்கப்படும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது.