புது வீட்டில் குடியேறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ மூர்த்தி, தனம் – சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் புது கடை திறப்பு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்துள்ள நிலையில், அடுத்ததாக புது வீடு கிரகப்பிரவேசம் நடைபெற இருப்பது போல புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல சுபகாரியங்கள் நடந்து முடிந்துள்ளது. தனத்திற்கு குழந்தை பிறந்தது முதல் பெயர் வைக்கும் நிகழ்ச்சி, கயல் காது குத்து, பிறந்தநாள் என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடந்து முடிந்த நிலையில், குடும்பமே தன்னுடைய முழு உழைப்பையும் போட்டு பெரிய கடை ஒன்றை கட்டி இருக்கின்றனர். ஒரு ரூபாய் கடன் கூட வாங்காமல் பெண்களின் நகைகளை அடகு வைத்து இந்த கடை கட்டப்பட்டது. அதன் திறப்பு விழாவை பிரமாண்டமாக நடத்தப்பட வேண்டும் என குடும்பமே சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
8 மாதத்தில் 10 கிலோ உடல் எடையை குறைத்த “குக் வித் கோமாளி” ஷிவாங்கி – அவரே வெளியிட்ட பதிவு!
அதற்காக பல ஏற்பாடுகள் நடக்க பல தடைகளும் வந்துள்ளது. அதை எல்லாம் குடும்பமே ஒற்றுமையான இணைந்து தடுத்து இருக்கின்றனர். பின் கோலாகலமாக கடை திறப்பு விழா நடைபெற்றுள்ளது. அதில் சொந்தங்கள் பலர் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் அடுத்து இதே போல நிறைய கடை கட்ட வேண்டும் எனவும், தற்போது இருக்கும் வீடு போதவில்லை என்பதால் அடுத்து பெரிய வீடு கட்ட வேண்டும் என தனம் ஆசையுடன் இருக்கிறார்.
இந்நிலையில் தனமும் மூர்த்தியும் புதிய வீட்டில் கிரகப்பிரவேசம் நடத்துவது போல புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. அதை பார்த்த ரசிகர்கள் சீரியலில் அடுத்து வர இருக்கும் எபிசோடாக இருக்குமோ என குழப்பத்தில் இருக்கின்றனர். ஆனால் அது இல்லை இது விளம்பரப்படத்திற்காக நடிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.