“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கர்ப்பமாக இருக்கும் ஐஸ்வர்யா – அதிர்ச்சியில் முல்லை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கடை திறப்பு விழாவை நினைத்து குடும்பத்தினர் சந்தோசமாக இருக்கின்றனர். இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடுகளில் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பது போல காட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பம் என்றால் இப்படி தான் இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் வருவதால் சீரியல் பார்க்கும் ரசிகர்கள் விறுவிறுப்பாக தினமும் சீரியல் பார்க்கின்றனர். பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ் என்ற புதிய கடை திறப்பு விழாவிற்கு குடும்பமே தயாராகி வருகின்றனர். தடைகளை தாண்டி புதிய கடையை அண்ணன் தம்பிகள் இணைந்து திறந்துள்ளனர். குடும்பமே கடை திறப்பதை நினைத்து சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
சர்ச்சையில் குக் வித் கோமாளி சீசன் 3 | ‘என்னுடைய நெகட்டிவ் தான் தெரிகிறது’ – வித்யூலேகா ஓபன் டாக்!
அதற்கான ஏற்பாடுகளில் குடும்பத்தினர் இருக்கின்றனர். நாளைய எபிசோடில் கடை திறப்பு விழா காட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்து வர இருக்கும் மிக பெரிய ட்விஸ்ட் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில் முல்லைக்கு குழந்தை பிறக்கவில்லை என நினைத்து வருத்தப்பட்டு சென்று இருக்கின்றனர். முல்லைக்கு இனிமேல் குழந்தை பிறக்காது என்ற உண்மையை கதிர் சொல்லாமல் மறைந்து இருக்கிறார்.
புது கடை திறப்பு விழாவில் மக்கள் கூட்டத்தில் சிக்கிய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – வைரலாகும் வீடியோ!
இதற்கிடையே ஐஸ்வர்யா பகுதி நேர வேலைக்கு செல்ல ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார். இனிமேல் அவர் வேலைக்கு தயாராக அப்போது தான் ஐஸ்வர்யா கர்ப்பமாக இருப்பது தெரியவர இருக்கிறது. அதை கேட்டு தனம் அதிர்ச்சி அடைய இருக்கிறார். முல்லை தனக்கு பின் திருமணம் முடிந்துள்ளதை நினைத்து வருத்தப்பட இருக்கிறார். அதனால் இனி வரும் எபிசோடுகளில் சுவாரசியம் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.