கண்ணனிற்கு பாசத்துடன் சாப்பாடு ஊட்டிய மூர்த்தி – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” புது கடை திறப்பு கொண்டாட்டம்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், பல தடைகளை தாண்டி புது கடையை குடும்பத்தினர் திறக்கின்றனர். அந்த சந்தோஷத்தில் மூர்த்தி, கண்ணனை முழு மனதுடன் ஏற்றுக் கொள்கின்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் பல திருப்பங்கள் வந்துள்ளது. குடும்பத்துடன் சேர்ந்து தர்ணாவில் ஈடுபட்டு அந்த அதிகாரி மீது உள்ள குற்றத்தை நிரூபித்து விடுகின்றனர். போலீஸ் மூலமாக அந்த அதிகாரி கடையை திறக்க அனுமதி வழங்குகிறார். அதனால் குடும்பமே சந்தோஷமாக இருக்க கடையை திறக்க இருக்கின்றனர். நாளை சொன்னபடியே கடை திறப்பு விழா நடைபெற இருக்கிறது. குடும்பமே தங்களது உழைப்பை போட்டு கட்டிய கடையை பார்த்து சந்தோசமாக இருக்கின்றனர்.
இந்நிலையில் மூர்த்தி கடையை திறந்த சந்தோஷத்தில் அனைவருக்கும் நான் தான் ஊட்டி விடுவேன் என சொல்கிறார். தனத்தை பெரிய சட்டி எடுத்து வர சொல்லி அதில் மொத்தமாக சாதத்தை போட்டு தம்பிகளுக்கு ஊட்டி விடுகிறார். தம்பி மனைவிகளுக்கு கையில் உருண்டை பிடித்து வைத்து சாப்பிட சொல்கிறார். மேலும் பாடல் பாடி தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த தம்பிகள் அதை பார்த்து சந்தோசப்படுகின்றனர்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கடை திறப்பு விழாவில் ஜீவா செய்த காரியம் – வைரலாகும் வீடியோ! ரசிகர்கள் ஷாக்!
அப்போது கண்ணன் இல்லாமல் இருக்க மூர்த்தி கண்ணனை அழைக்கிறார். கண்ணன் அண்ணனின் குரல் கேட்டு வேகமாக வர நீயும் வா சாப்பிட என மூர்த்தி சொல்கிறார். அப்போது கண்ணன் அமர மூர்த்தி கண்ணனிற்கு சாப்பாடு ஊட்டி விடுகிறார். தான் செய்த தவறை எல்லாம் அண்ணன் மன்னித்து விட்டதை நினைத்து கண்ணன் ஆனந்த கண்ணீருடன் அழுகிறார். இது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.