‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – பிரம்மாண்டமாக திறக்கப்பட்ட புது கடை!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரமாக புது கடை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற இருக்கிறது. அது குறித்த ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல போராட்டங்களுக்கு பின் சீரியலில் சந்தோசமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற இருக்கிறது. அதாவது பல ஆண்டுகளாக பெரிய கடை கட்ட வேண்டும் என்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் தம்பிகளின் கனவு நினைவாக இருக்கிறது. அந்த புது கடைக்கு “பாண்டியன் சூப்பர் ஸ்டோர்ஸ்” என பெயர் வைத்து சந்தோசப்படுகின்றனர். கடையை கட்டி முடித்து திறப்பு விழாவிற்கு ஏற்பாடுகள் நடைபெறும் போது கடை சீல் வைக்கப்படுகிறது. கண்ணன் கதிரின் பழைய பகையே அதற்கு காரணமாக இருக்கிறது.
ஆனால் இது பற்றி குடும்பத்திற்கு தெரியாமல் இருக்க, அதன் பின் எல்லா விவரங்களும் தெரிய வருகிறது. இந்நிலையில் மூர்த்தி மற்றும் தனம் அரசு அலுவலகம் முன்னால் தர்ணாவில் ஈடுபடுகின்றனர். அதனால் அந்த அலுவலர் கடையை திறக்க அனுமதி வழங்குகிறார். இந்நிலையில் கடையை திறக்க குடும்பத்தினர் பல ஏற்பாடுகளை செய்கின்றனர். மேள தாளம் அலங்காரம் என களைகட்டுகிறது. குடும்பமே சேர்ந்து அதற்காக தயாராகி வருகிறது.
இந்நிலையில் அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.அதில் கதிர் முல்லை பலூன் வைத்து அலங்காரம் செய்ய சொந்தங்கள் தெரிந்தவர்கள் என அனைவரும் வருகின்றனர். மேலும் தனம் பாண்டியனுடன் வந்து கடையை பார்த்து சந்தோசப்படுகின்றனர். பின் பாண்டியன் மற்றும் கயல் கையால் ரிப்பன் வெட்டி கடை திறந்து வைக்கப்படுகிறது. அண்ணன் தம்பிகள் முகத்தில் சந்தோசத்திற்கு அளவில்லாமல் இருக்கிறது.