கதிரை நினைத்து வருத்தப்படும் தனம்.. வழக்கம் போல தில்லாலங்கடி பிளான் போடும் மீனா – பாண்டியன் ஸ்டோர்ஸ்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அனைவரும் தற்போது கதிர் மற்றும் முல்லையின் வீட்டில் வந்து இருக்கின்றனர். பல நாட்கள் கழித்து மொத்த குடும்பமும் சேர்ந்து இருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று வருகின்றன.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் பல நாட்கள் கழித்து மீண்டும் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். இதனால் வழக்கம் போல் தனம், மீனா, முல்லை மற்றும் ஐஷுவின் கூட்டணியில் காட்சிகள் வர தொடங்கியுள்ளது. கதிர் மற்றும் முல்லை இருவரும் அனைவரையும் தங்கள் வீட்டிற்கு கூட்டி வந்து பார்த்துக் கொள்கின்றனர். முல்லை யாரையும் வேலை செய்ய விடாமல் பார்த்துக் கொள்கிறார்.
Exams Daily Mobile App Download
தனம் கதிரின் வேலையை பற்றி முல்லையிடம் விசாரிக்கிறார். கதிர் ரெஸ்ட் இல்லாமல் வேலை செய்வதாக தனம் வருத்தப்படுகிறார். முல்லை அதெல்லாம் அவர் நடுவில் கொஞ்ச நேரம் தூங்கிக் கொள்வார் என்று தனத்தை சமாதானம் செய்கிறார். இன்றைக்கு எல்லாரும் ஒன்றாக சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடலாம் என்று முல்லை சொல்லுகிறார்.
Follow our Instagram for more Latest Updates
அப்போது சமைப்பது குறித்து பேச்சு வர தனம் தான் சமைப்பதாக சொல்லி எழுந்திருக்கிறார். ஆனால் முல்லை யாரும் வேலை பார்க்க வேண்டாம். தானே சமைத்துக் கொள்வதாக சொல்லுகிறார். இப்படியே இவர்கள் பேசுவதை மீனா பார்த்துவிட்டு, கடைசியில் எல்லாரும் ஒண்ணா வேலை பார்க்கலாம் என்று சொல்லிடுவாங்க..நமக்கு எதுக்கு வம்பு என்று நைசாக இடத்தை காலி செய்ய பார்க்கிறார். ஆனால் ஐஷு மீனாவின் பிளானை புரிந்து கொண்டு அவரை பிடித்து உட்கார வைத்து, மைண்ட் வாய்ஸ் கேட்டு விட்டதாக சொல்லி கலாய்க்கிறார்.