மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மூர்த்தி, அண்ணனை நினைத்து அழும் கண்ணன் – இன்றைய எபிசோட்!

0
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மூர்த்தி, அண்ணனை நினைத்து அழும் கண்ணன் - இன்றைய எபிசோட்!
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மூர்த்தி, அண்ணனை நினைத்து அழும் கண்ணன் - இன்றைய எபிசோட்!மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மூர்த்தி, அண்ணனை நினைத்து அழும் கண்ணன் - இன்றைய எபிசோட்!
மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்த மூர்த்தி, அண்ணனை நினைத்து அழும் கண்ணன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் மருத்துவமனையில் இருந்து மூர்த்தி டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். பின் அவர் வீட்டிற்கு வர கண்ணன் அவர் தோளில் சாய்ந்து வருத்தப்பட்டு அழுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணனை அழைத்து கதிர் ஜூஸ் வாங்கி கொடுக்க அப்போது கண்ணன் அண்ணனை நாளைக்கு டிஸ்சார்ஜ் செய்வதாக சொன்னார்கள் என சொல்கிறார். பின் கதிரை நீ எங்கே தங்கி இருக்கிறாய் என கேட்க நான் முல்லை வீட்டில் தான் இருக்கிறேன் என சொல்கிறார். நம்ம வீட்டிற்கு வரலாமே என கேட்க அது சரியாக வராது தேவை இல்லாமல் எதுவும் நினைக்காதே என கதிர் சொல்கிறார். மறுபக்கம் தனம் ஜீவா வாசலில் அமர்ந்திருக்க ஜெகா வருகிறார்.

அப்போது ஜெகா அம்மாவை வீட்டில் விட்டு விட்டேன் என சொல்ல தனம் நல்ல வேலை என சொல்கிறார். பின் நீயும் வீட்டிற்கு போகலாமே என சொல்ல நான் மாமா வராமல் வர மாட்டேன் என மூர்த்தி சொல்கிறார். மாமா நாளைக்கு வீட்டிற்கு வந்துவிடுவார் அவருடன் சேர்ந்து நான் வருகிறேன் என சொல்ல பாண்டியன் தேடுவான் என சொல்கிறார். பாண்டியனுக்கு தேவையான எல்லாம் செய்து வைத்துவிட்டேன் என சொல்ல இவள் முடிவு செய்துவிட்டா மாற்ற முடியாது என ஜெகா சொல்கிறார். பின் ஜீவா கண்ணனை வீட்டிற்கு செல்ல சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

அங்கே ஐஸ்வர்யாவும் மீனாவும் தனியாக இருக்கிறார்கள் அதனால் நீ சென்று துணைக்கு இரு என சொல்ல உடனே கண்ணன் புறப்பட்டு செல்கிறார். வீட்டில் ஐஸ்வர்யா மீனா கஸ்தூரி என அனைவரும் இருக்க கண்ணன் வருகிறார். என்ன இந்த நேரத்தில் வந்திருக்கிறாய் என ஐஸ்வர்யா கேட்க கண்ணன் அண்ணன் தான் நீங்க தனியாக இருப்பதாக சொன்னார் என சொல்கிறார். பின் அண்ணன் நாளைக்கு வீட்டிற்கு வந்துவிடுவார் என சொல்ல ஐஸ்வர்யா மீனா ஜீவா சொன்னதாக சொல்கிறார்கள்.

பின் கண்ணன் சாப்பாடு இருக்கிறதா என கேட்க கஸ்தூரி அண்ணி சமைத்து வைத்திருப்பதாக சொல்கிறார். அனைவரும் பிறகு படுக்க திட்டமிடுகின்றனர். மறுபக்கம் கதிர் முல்லை வீட்டிற்கு செல்கிறார். முல்லையிடம் போன் செய்து கதவை திறக்க சொல்கிறார். பின் முல்லை வந்து கதவை திறக்க கதிர் அம்மா அப்பா தூங்கிட்டாங்களா என கேட்கிறார். மாமா எப்படி இருக்கிறார் என முல்லை கேட்க நாளைக்கு வீட்டிற்கு சென்று விடுவாராம் அவர் நன்றாக இருக்கிறார் என தெரிந்த பின் தான் மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது என சொல்கிறார்.

பாரதி முடிவை கேட்டு சந்தோசப்பட்ட சண்முகம், அழுது புலம்பும் வெண்பா – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!

கதிர் தூங்கிவிட்டு காலையில் சீக்கரம் எழுந்திருக்கிறார். அப்போது ஒரு ட்ரெஸ் தான் இருப்பதால் அதையே துவைத்து போட ஆனால் முல்லை வேற சட்டை இருப்பதாக எடுத்து கொடுக்கிறார். பின் கதிர் மருத்துவமனைக்கு கிளம்பி விட அங்கே மூர்த்தியை அழைத்து வருகின்றனர். கதிர் முகத்தை மறைத்து கொண்டு இருக்கிறார். மூர்த்தியை வீட்டிற்கு அழைத்து செல்கின்றனர். வீட்டில் கண்ணன் ஆவலுடன் எதிர் பார்த்து இருக்க கார் வருகிறது.

மூர்த்தியை கவனமாக இறக்கி உள்ளே அழைத்து செல்கின்றனர். அப்போது மூர்த்தியை பார்த்து ஐஸ்வர்யாவும் மீனாவும் சந்தோசப்படுகின்றனர். கஸ்தூரி ஆரத்தி எடுக்கிறார். பின் மூர்த்தி வீட்டிற்கு வந்து இப்போது தான் நிம்மதியாக இருக்கிறது அப்படியே போய்விடுவேன் என நினைத்தேன் என சொல்ல 3 நாட்கள் மயக்கத்தில் இருந்தீர்கள் எப்படி நினைத்தீர்கள் என கண்ணன் கேட்கிறார். நான் நினைத்தேன் எல்லாம் கனவு போல இருப்பதாக சொல்கிறார். பின் கயல் பாண்டியனை பார்க்க வேண்டும் என சொல்ல மீனாவும் ஐஸ்வர்யாவும் தூக்கிக் கொண்டு வருகின்றனர். மூர்த்தி அவர்களை கொஞ்ச கண்ணன் மூர்த்தி தோளில் சாய்ந்து அழுகிறார்

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!