மூர்த்தியிடம் கதிர் பற்றி சண்டை போடும் பார்வதி, ஜீவாவை கடைக்கு வர சொல்லும் மீனாவின் அப்பா – இன்றைய எபிசோட்!

0
மூர்த்தியிடம் கதிர் பற்றி சண்டை போடும் பார்வதி, ஜீவாவை கடைக்கு வர சொல்லும் மீனாவின் அப்பா - இன்றைய எபிசோட்!
மூர்த்தியிடம் கதிர் பற்றி சண்டை போடும் பார்வதி, ஜீவாவை கடைக்கு வர சொல்லும் மீனாவின் அப்பா - இன்றைய எபிசோட்!
மூர்த்தியிடம் கதிர் பற்றி சண்டை போடும் பார்வதி, ஜீவாவை கடைக்கு வர சொல்லும் மீனாவின் அப்பா – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை அம்மா மூர்த்தியிடம் வந்து கதிர் ஹோட்டலில் வேலை செய்வதை சொல்லி சண்டை போடுகிறார். மூர்த்தி எல்லா வேலையும் நல்ல வேலை தான் என சொல்லி அனுப்புகிறார். பின் மீனாவின் அப்பா ஜீவாவை தன்னுடைய வேலைகளை பார்க்க சொல்லி சொல்கிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், முல்லை அம்மா கதிர் ஹோட்டலில் வேலை செய்வதை பார்த்துவிட்டு மூர்த்தி வீட்டிற்கு வருகிறார். அங்கே வந்து தனம் எங்கே என கேட்க கண்ணனும் ஐஸ்வர்யாவும் அவர் கடைக்கு சென்றிருப்பதாக சொல்கிறார்கள். முதலாளி அம்மா கடைக்கு போயிருக்காங்களா என கேட்க அப்போது மீனா வருகிறார். ஏன் இப்படி சத்தம் போடுறீங்க மாமா உள்ளே தூங்கி கொண்டிருப்பதாக மீனா சொல்ல ஆமாம் நான் சண்டை போட தான் வந்திருக்கேன் என பார்வதி சொல்கிறார்.

ஏற்கனவே போட்ட சண்டையில் எங்க குடும்பம் ஆனது போதும் மறுபடியும் சண்டை போட நினைத்து வந்தால் கிளம்பி சென்றுவிடுங்கள் என சொல்கிறார். நீ யாருடா சின்ன பையன் என்னை பேச என பார்வதி கேட்க, பெரியவர்கள் ஒழுங்காக பேசி இருந்தால் என் குடும்பம் இப்படி ஆகி இருக்காது என சொல்கிறார். மீனா பார்வதியை மெதுவாக பேச சொல்கிறார். மாமா உள்ளே தூங்கி கொண்டிருப்பதாக சொல்ல அப்போது மூர்த்தி வருகிறார். வாங்க அத்தை என சொல்ல, மீனா மூர்த்தியை உள்ளே போக சொல்கிறார்.

TN Job “FB  Group” Join Now

ஆனால் பார்வதி உங்க குடும்பத்தில் என் மகள் நன்றாக இருக்க வேண்டும் என சொல்லி தான் கல்யாணம் செய்து வைத்தோம் ஆனால் இப்போது என் மகள் கஷ்டப்படுகிறாள் அவளை வீட்டை விட்டு துரத்தி விட்டு எல்லாரும் நன்றாக இருக்கீங்க என பார்வதி சொல்கிறார். அவங்க தான போனாங்க என மீனா சொல்ல, உன் அப்பா தான் காரணம் என சொல்ல, மீனா நீங்களும் தான் காரணம் என சொல்கிறார். மூர்த்தி என்ன ஆச்சு என கேட்க அங்கே என் மாப்பிள்ளை ஹோட்டலில் எச்ச இலை எடுத்துக் கொண்டிருக்கிறார் என சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இத்தனை வருஷம் அவருடைய உழைப்பை எல்லாம் வாங்கி கொண்டு நீங்க எல்லாரும் நன்றாக இருக்கீங்க ஆனால் என் மகள் எச்ச இலை எடுபவரின் மனைவி என சொல்ல ரொம்ப பெருமையாக இருக்கிறது என சொல்கிறார். பின் மூர்த்தி அவன் வேலை செய்து தான சம்பாரிக்கிறான். என் அப்பா இறந்தப்ப நானும் கூலி வேலை தான் செய்தேன் என சொல்ல, இங்கே இருக்கும் போதும் அவர் மூட்டை தூக்கும் வேலை தான் செய்தார் என சொல்கிறார். என் மகளை கஷ்டப்படுத்திவிட்டு நீங்க எல்லாரும் நன்றாக இருக்க மாட்டீங்க என பார்வதி சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

மூர்த்தி இதை பெரிதாக நினைக்க வேண்டாம் என சொல்கிறார், அனைவரும் கதிரை நினைத்து வருத்தப்படுகின்றனர். மறுபக்கம் தனம் நேரமாகி வீட்டிற்கு போகாமல் வேலை செய்து கொண்டிருக்கிறார். அப்போது மீனாவின் அப்பா வருகிறார். அவர் இன்னும் வீட்டிற்கு போகவில்லையா என கேட்க ஆமாம் என தனம் சொல்கிறார். பின் மீனாவின் அப்பா எங்கே வேலையை பார்க்க வர சொல்ல இங்கே பாருங்க வேலை பார்க்க ஆள் இல்லாமல் அண்ணி குழந்தையை கூட பார்க்காமல் இங்கே வேலை செய்கிறார்கள்.

பாக்கியாவை வீட்டிற்கு அழைக்கும் ஈஸ்வரி, கோபியை காரணம் சொல்லும் இனியா – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

இந்த நேரத்தில் அவரை தனியாக விட்டு வர முடியாது என ஜீவா சொல்கிறார். பின் வீட்டிற்கு வந்த மீனாவின் அப்பா கயலை கொஞ்சிவிட்டு மூர்த்தியை பார்த்து பேசுகிறார். உடம்பு நன்றாக இருக்கிறதா என கேட்க, இப்படி வீட்டில் இருப்பதற்கு கடையில் வந்து இருக்கிறேன் என சொல்கிறேன் ஆனால் கேட்கவில்லை என சொல்கின்றனர். பின் மீனா வீட்டில் சமையல் வேலைகளை நான் தான் செய்கிறேன் என சொல்லி அவர் சமைத்த கேசரியை கொடுக்கிறார். ஆனால் மீனா அப்பாவால் அதை சாப்பிட முடியவில்லை. உடனே ஐஸ்வர்யா மீனாவை கிண்டல் செய்கிறார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!