ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக நைட்டி அணிந்த மீனா, மீண்டும் தொடங்கிய பஞ்சாயத்து – “பாண்டியன் ஸ்டோர்ஸ்” அதிரடி எபிசோட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கும் நிலையில் மீனாவால் புதிதாக ஒரு பிரச்சனை கிளம்பி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தமிழ் சின்னத்திரையில் குடும்ப சீரியல் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இதுவரை அண்ணன் தங்கை, அக்கா தம்பி பாசத்தில் மட்டுமே சீரியல்கள் எடுக்கப்பட்ட நிலையில், அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக கொண்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் பார்க்க ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த சீரியலில் கூட்டு குடும்பத்தில் எவ்வளவு சண்டை வந்தாலும் விட்டுக் கொடுக்காமல் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். கண்ணன் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.
விஜே சித்ரா நடிப்பில் வெளிவர இருந்த “அன்பே அன்பே” சீரியல் – ப்ரோமோ ரிலீஸ்!
இருந்தாலும் அவருக்கு கஷ்டம் என்று வந்ததும் குடும்பத்தில் அவரை மீண்டும் சேர்த்துக் கொண்டுள்ளனர். இதுவரை அனைவரும் குடும்பத்தில் ஒற்றுமையாக இருக்கும் நிலையில் புதிதாக வந்த ஐஸ்வர்யாவால் என்ன மாதிரி பிரச்சனை வரும் என ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்தனர். அந்த நேரத்தில் வந்தது தான் ஐஸ்வர்யா நைட்டி போட்ட பிரச்சனை, அவர் நைட்டி போட்டதை பார்த்து கண்ணன் அறிவுரை சொல்ல அதை எல்லாம் காதில் வாங்காமல் ஐஸ்வர்யா இருக்க, மீனாவும் கூப்பிட்டு சொல்கிறார். அதையும் ஐஸ்வர்யா உதாசீனப்படுத்த தனம் சொல்லியும் கேட்கவில்லை.
Vijay TV Bigg Boss 5 Promo | ரூ.12 லட்சத்துடன் வெளியேற முடிவு செய்த சிபி! தடுக்கும் தாமரை!
ஆனால் தனம் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் இருக்க அதை பார்த்து மீனாவிற்கு கோவம் வருகிறது. அதனால் ஜீவாவிடம் நைட்டி வாங்கித்தர சொல்ல அவர் தருவதாக தெரியவில்லை. அதனால் அவரது அம்மாவிற்கு போன் செய்து நைட்டி வாங்கி தர சொல்கிறார். பின் நைட்டியை போட்டுக் கொண்டு வெளியே வர மீண்டும் குடும்பத்தில் பிரச்சனை வெடிக்கிறது. இவ்வளவு பாசமான குடும்பத்தை நைட்டி பிரிக்குமா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. இந்த நைட்டி பிரச்சனை எங்கே முடியும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.