‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனம் அண்ணி சுஜிதாவின் காதலர் தின கொண்டாட்டம் – வைரலாகும் வீடியோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் தனம் அண்ணியாக நடித்து வரும் நடிகை சுஜிதா பல வருடங்களுக்கு பின்னர் கணவர் தனுஷுடன் இணைந்து கொண்டாடிய காதலர் தின விழாவை தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட அது வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை சுஜிதா
தமிழ் சினிமாவில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு, மலையாள சினிமா மற்றும் சின்னத்திரையில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஒரு முன்னணி நடிகை சுஜிதா. கேரளா மாநிலத்தை சொந்த ஊராக கொண்ட நடிகை சுஜிதா, சினிமாவில் பிரபலமாக இருந்த கால கட்டத்தில் அதே துறையை சேர்ந்த தனுஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தொடர்ந்து குழந்தை பிறப்புக்கு பின்னர் நடிப்பிற்கு சில காலம் ஓய்வு கொடுத்த அவர் 2வது முறையாக சின்னத்திரை சீரியல்களில் களமிறங்கினார்.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் இணைந்த “பாரதி கண்ணம்மா” அருண் – வைரலாகும் புகைப்படங்கள்!
அந்த வகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல்வேறு சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு மக்கள் மத்தியில் இருந்து அதிக வரவேற்புகளை பெற்றுத்தந்தது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல். கடந்த 4 ஆண்டுகளாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ என்ற சூப்பர் ஹிட் சீரியலில் தனம் என்ற முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் நடிகை சுஜிதா தனக்கென ரசிகர்களை உருவாக்கி இருக்கிறார்.
அதே போல, தற்போது ‘வதினம்மா’ என்ற தெலுங்கு சீரியலிலும் லீட் ரோலில் நடித்து வருகிறார் இவர். மற்ற சீரியல் நடிகர், நடிகைகளை போல சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சுஜிதா ‘கதைகேளு கதைகேளு’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். இந்த சேனலில் பல விதமான வீடியோக்களை பதிவிட்டு மக்களின் கவனம் ஈர்த்து வரும் நடிகை சுஜிதா தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு, பழைய நினைவுகளை மீண்டும் கொண்டு வரும் வகையில் கணவருடன் சேர்ந்து இந்த ஆண்டு காதலர் தினத்தை கொண்டாடி இருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ஒரு வேலை நிமித்தமாக பிப்ரவரி 14ம் தேதியன்று தான் முதன் முதலாக தனது கணவருடன் போனில் பேசி இருப்பதாக கூறி இருக்கிறார் நடிகை சுஜிதா. பிறகு இருவரும் சந்தித்து, காதலித்து திருமணம் செய்து கொண்ட பின்னர், கணவன் மனைவியாக இணைந்து முதல் காதலர் தினத்தை கொண்டாடியது, முதன் முதலில் பேசியது உள்ளிட்ட 2 காதலர் தினங்களையும் மறக்க முடியாதது என்று குறிப்பிட்டுள்ளார் சுஜிதா.
தொடர்ந்து நடிகை சுஜிதா தனது கணவருடன் சேர்ந்து கொண்டாடிய முதல் காதலர் தினத்தில், அவர் எங்கு எல்லாம் கூட்டி சென்றார், எதெல்லாம் வாங்கி கொடுத்தார் என்பதை மீண்டும் நினைவுபடுத்தி திரும்பவும் அவற்றை செய்ய வேண்டும் என்று கணவருக்கு டாஸ்க் ஒன்று கொடுக்கிறார். அந்த வகையில் முதலில் சுஜிதா அவரது கணவருடன் சேர்ந்து பெசன்ட் நகர் கடற்கரை, ரெஸ்டாரண்ட், கடை, ஷாப்பிங், டைமண்ட் மோதிரம் என காதலர் தின பழைய நினைவுகளை ரீகிரியேட் செய்து அதனை ஒரு வீடியோவாக வெளியிட அது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.