கண்ணனுக்காக ஜனார்த்தனனிடம் சண்டை போடும் மீனா, நெகிழ்ச்சியில் ஜீவா – ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கண்ணன் கடை பணத்தை திருடியதாக ஜனார்த்தனனால் குற்றம் சாட்டப்பட, கண்ணனுக்காக தனது அப்பாவிடம் சண்டை போடும் மீனாவை பார்த்து ஜீவா நெகிழ்ச்சியாவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்
இதுவரை ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் சோகமும், சண்டையுமாக நகர்ந்து வந்த கதைக்களம் தற்போது புதிய வேகம் எடுத்திருக்கிறது. பொதுவாக ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ குடும்பத்தில் ஏற்படும் சண்டை, குழப்பம், பிரச்சனைகளுக்கு காரணம் என சொல்லப்படும் மீனா அவ்வப்போது மூர்த்தி குடும்பத்திற்காக செய்யும் சில காரியங்களால் ரசிகர்களிடம் ஸ்கோர் செய்து விடுவார். அந்த வகையில் கண்ணன் மீது போடப்பட்டிருக்கும் திருட்டு பழியை நீக்க மீனா எடுக்கும் புதிய முயற்சிகள் ப்ரோமோவாக வெளியாகி பார்வையாளர்களின் கவனம் பெற்று வருகிறது.
‘தல’ என்று அழைப்பதை நிறுத்துங்கள் – ரசிகர்களுக்கு நடிகர் அஜித் குமாரின் வேண்டுகோள்!
அதாவது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் கடந்த சில எபிசோடுகளுக்கு முன்னதாக, ஜனார்த்தனன் கடையில் பணம் காணாமல் போக அந்த பழி கண்ணன் மீது வருகிறது. இதை சரிப்படுத்த முயற்சிக்கும் கதிர், மூர்த்தியிடம் கெட்ட பெயர் வாங்குகிறார். இதனால் கோபமடையும் முல்லை, கண்ணனை கண்டபடி திட்டி விடுகிறார். இப்போது, தன்னால் கதிர் திட்டு வாங்குவதை அறியும் கண்ணன் வருத்தத்தில் இருக்க ஐஷ்வர்யா, கஸ்தூரியிடம் பண உதவி கேட்கிறார்.
இப்படி இருக்க வழக்கம் போல குடும்பத்துக்குள் குழப்பத்தை உருவாக்க முயற்சிக்கும் கஸ்தூரி தனக்கு தெரியாமலேயே ஒரு நல்ல விஷயத்தை செய்து விடுகிறார். அதாவது, கஸ்தூரி மூலமாக மூர்த்தி குடும்பத்துக்கு இந்த பண விவகாரம் தெரிய வருகிறது. இந்த தகவலை அறிந்ததும் கோபத்தில் கொந்தளிக்கும் மீனா, ஜீவாவை கூட்டிக்கொண்டு ஜனார்த்தனனின் கடைக்கு செல்கிறார். கண்ணன் தான் அந்த பணத்தை எடுத்தான் என்பது எப்படி உங்களுக்கு தெரியும் என மீனா சண்டையிட இது என் கடை எனக்கு தெரியாதா என ஜனார்த்தனன் பதில் சொல்கிறார்.
‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை VJ சித்ராவின் ஒரு ஆண்டுகால நினைவலைகள் – ரசிகர்கள் கவலை!
தொடர்ந்து கடையில் இருக்கும் சிசிடிவி கேமராவை பார்க்கும் மீனா, அதில் இருக்கும் வீடியோ காட்சிகளை பார்க்க வேண்டும் என கேட்கிறார். பின்னர் ஒரு வழியாக தேடிப் பிடித்து உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்கிறார். இப்போது நேராக கல்லாவிற்கு வரும் மீனா, அதில் இருந்து 15,000 பணத்தை எடுத்துக்கொண்டு இது எங்கள் வீட்டுப்பணம் என கூறி விட்டு ஜீவாவின் கையை பிடித்து கொண்டு செல்கிறார். இதை பார்த்து ஜீவா நெகிழ்ச்சியில் விக்கித்து போவது போல ப்ரோமோ ஒன்று வெளியாகி இருக்கிறது.