யாரும் எதிர்பார்க்காத பயங்கர ஷாக் … பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமும் நடுரோட்டில் நிற்கும் அவலம் !
மீனாவின் அப்பா செய்த வேலையால் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் மொத்த குடும்பமும் நடுரோட்டில் நிற்கும் நிலை வந்துள்ளது. இதற்கான ப்ரோமோ தற்போது வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கதிர் கலந்து கொண்ட போட்டியில் வென்று 10 லட்சம் ரூபாய் முதல் பரிசை வென்றுள்ளார். இப்பொது தான் அனைத்தும் சகஜமாகி கதிரும் முல்லையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் வீட்டிற்குள் அடி எடுத்து வைத்துள்ளனர். ஆனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு முக்கிய திருப்பம் ஒன்று நடக்க இருக்கிறது.
Follow our Instagram for more Latest Updates
மீனாவை பார்க்க வீட்டிற்கு வரும் ஜனார்த்தனன் அங்கே கதிர் இருப்பதை பார்த்து விட்டு, சொன்ன வாக்கை காப்பாற்றாமல் வெறும் கையோடு வீட்டிற்கு வந்திருப்பதாக கதிரை வம்பிழுக்கிறார். இதனால், மற்ற அனைவரும் கோவப்படுகின்றனர். கதிர் கொண்டு வந்த 10 லட்சம் செக்கை அவரிடம் காட்டி வாயை அடைகின்றனர். இதனால், பார்வதி தன் மாப்பிளையை பார்த்து குறை சொன்ன ஜனார்தனனின் முகத்தில் அடித்தாற்போல் போல், மறுபடியும் அங்கே சண்டை வருகிறது.
Exams Daily Mobile App Download
இதனால், கோவத்தில் ஜனார்த்தனன் வீட்டை விட்டு அனைவரையும் வெளியே போக சொல்லுகிறார். மூர்த்தியும் அனைவரையும் கிளம்ப சொல்லுகிறார். அப்போது எங்கே செல்வது என்று தெரியாமல் அனைவரும் குழப்பத்தில் இருக்க, கதிர் நம்ம வீட்டுக்கு போகலாம் வாங்க என்று அனைவரையும் கூப்பிடுகிறார். இதனால், வேறு வழியில்லாமல் மொத்த குடும்பமும் கதிர் மற்றும் முல்லை தங்கிருந்த வீட்டிற்கு செல்கின்றனர்.