ஆபரேஷனுக்கு பணம் இல்லாமல் தவிக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் – கண்ணீரில் தனம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில், மூர்த்தி சொல்வதை கேட்காமல் முல்லையை அழைத்துக்கொண்டு கதிர் வீட்டை விட்டுக் கிளம்புகிறார். கதிர் வீட்டை விட்டு கிளம்பியதால், வருத்தத்தில் மூர்த்திக்கு நெஞ்சு வலி வருகிறது. மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்த விஷயத்தை அறிந்து கதிர் மீண்டும் வீட்டிற்கு வருவாரா? எந்த நோக்கத்தில் கதை நகரும் என்பதை வரும் எபிசோடுகளில் பார்க்கலாம்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பின் உச்சத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் முல்லையின் மருத்துவ செலவிற்காக மூர்த்தி குடும்பத்தினர் வெளியில் கடன் வாங்குகின்றனர். இதனிடையில் தனத்தின் பிறந்தநாளுக்காக தனம், முல்லை, மீனா குடும்பத்தினர் மூர்த்தி வீட்டிற்கு வந்துள்ளனர். இந்த சமயத்தில் கடனை கொடுத்தவர் வீட்டு முன்னாடி வந்த சத்தம் போட, மீனாவுக்காக அவள் அப்பா கொடுத்த பணத்தை எடுத்து கடன்காரனுக்கு கொடுத்துவிடுகிறார் ஜீவா.
TN Job “FB Group” Join Now
இந்த விஷயம் தெரிந்து மீனாவின் அப்பா கதிருக்கு வக்கு இருந்தால் அவர் பொண்டாட்டிக்கு செலவு பண்ணட்டும். என் பொண்ணு எதுக்காக செலவு பண்ணனும் என கேட்க, இதனால் வீட்டில் பிரச்சனை வெடிக்கிறது. இதனால் கதிர் நான் வீட்டை வெளியில் போறேன் என முடிவு செய்கிறார். முல்லைக்காக வாங்கிய பணத்தை கொடுத்துட்டு நான் திரும்பவும் இந்த வீட்டுக்கு வருகிறேன் என்கிறார். வீட்டை விட்டு போனால் எங்க யார்க்கூடவும் பேசக்கூடாது என்கிறார் மூர்த்தி . வீட்டில் உள்ளவர்கள் எவ்வளவு தடுத்தும் கேட்காமல் முல்லையுடன் வீட்டை வெளியேறுகிறார் கதிர்.
தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும் – வானிலை மையம் அறிவிப்பு!
இதனால் அன்று இரவே மூர்த்திக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. பின்பு நெஞ்சு வலி என்று ஆஸ்பிட்டலில் அட்மிட் செய்துள்ளனர். 2 ஆப்ரேஷன் கட்டாயம் செய்ய வேண்டும் என டாக்டர் கூறிவிட்டார். தனம் ஆஸ்பிட்டலில் இருந்தப்படியே அழுது துடிக்கிறார். மேலும் ஆபரேஷனுக்கு 2 லட்சம் பணம் தேவைப்படுகிறது. இதனால் ஜீவா பணத்தை ரெடி பண்ண அலைகிறார். ஆனால் எங்கேயும் பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் விஷயம் தெரிந்து கதிர், ஆஸ்பிட்டலுக்கு வந்து அண்ணனை பார்ப்பாரா, ஆபரேஷனுக்கு இவரே பணம் ரெடி பண்ணி அண்ணனை காப்பற்றுவாரா? அல்லது மூர்த்தி கதிரிடம் பலமுறை கெஞ்சியும் கேட்காமல் கதிர் வீட்டை விட்டு போனதால்தான் மூர்த்திக்கு நெஞ்சுவலி வந்தது என கோபத்தில் தனம் மூர்த்தியை பார்க்க அனுமதிப்பாரா எனவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.