மீண்டும் கண்ணன் & ஐஸ்வர்யா வாழ்வில் நுழையும் பிரசாந்த் – ட்விஸ்ட்டான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதைக்களம்!!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவண விக்ரம். அவர் பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடித்த வசந்த் உடன் எடுத்த புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கூட்டு குடும்பத்தின் கதையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகி வருவதால் பல குடும்ப ரசிகர்களை கவர்ந்த சீரியலாக இருக்கிறது. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் நான்கு பேர் பாசமாக ஒரே வீட்டில் இருக்கின்றனர். மேலும் மூத்த அண்ணி தனம் குடும்பத்தின் ஒற்றுமையை காக்க போராடும் பொறுப்புள்ள ஒருவராக இருக்கிறார். ஆனால் கதையில் திருப்பமாக கடைசி தம்பியின் காதல் இருக்கிறது. அவர் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார்.
தமிழகத்தில் அரசுப்பணியில் தேர்வு செய்யப்படுவோருக்கு ‘இது’ கட்டாயம் – அமைச்சர் பொன்முடி அறிவிப்பு!
கண்ணன் இந்த முடிவு எடுக்க முக்கிய காரணம் பிரசாந்த் தான். அவர் ஐஸ்வர்யாவை கல்யாணம் செய்ய வேண்டும் என குறிக்கோள் உடன் இருக்க வேறு வழி இல்லாமல் கண்ணன் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்து இவ்வளவு கஷ்டங்களையும் அனுபவிக்கிறார். மேலும் கண்ணனின் திருமணத்தால் அவர் அம்மா இறந்தே போய்விட்டார். இந்நிலையில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சரவண விக்ரம், பிரசாந்த் கதாபாத்திரத்தில் நடித்த வசந்த் உடன் இணைந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக பிரசாந்த் கதாபாத்திரம் காட்டப்படாததால் சீரியலில் அவர் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுக்கிறாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். மேலும் இந்த சீரியலில் வில்லன் என எந்த நெகட்டிவ் கதாபாத்திரமும் இல்லை. பிரசாந்த் கதாபாத்திரம் மட்டுமே நெகட்டிவ் ரோலில் காட்டப்பட்டது. அதனால் அவர் மீண்டும் வந்தால் கதையில் சுவாரசியம் அதிகரிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர். அடுத்து சீரியலில் எந்த மாதிரியான கதை இருக்கும் என பொறுத்திருந்து பார்க்கலாம்.