“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் களமிறங்கிய புது முல்லை – ரசிகர்கள் ஷாக்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் சந்தோசத்திற்கு பஞ்சம் இல்லாமல் சீரியல் கதை சென்று கொண்டிருக்கும் நிலையில், முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் அண்ணன் தம்பிகளின் பாசத்தையும், கூட்டு குடும்பத்தின் ஒற்றுமையும், கடினமாக உழைத்தால் முன்னுக்கு வர முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. இந்த சீரியலில் பல அதிரடி திருப்பங்கள் இனி வரும் எபிசோடுகளில் வர இருக்கிறது. முல்லைக்கு குழந்தை பிறக்காது என்ற உண்மையை சொல்லாமல் மறைத்துவிடுகிறார். இந்த உண்மை தெரிந்தால் முல்லை தாங்கி கொள்வாரா என்பதே சீரியலில் அடுத்து வர போகும் ட்விஸ்ட் ஆகும்
விஜய் டிவி “ராஜா ராணி 2” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – சந்தியாவிற்கு பரிசு கொடுத்த சரவணன்!
இந்நிலையில் குடும்பமே போராடி புது கடை திறந்த சந்தோஷத்தில் இருக்கின்றனர். அதனால் எதை பற்றியும் யோசிக்காமல் குடும்பமே கடை திறப்பை கொண்டாடி வருகின்றனர். இந்த நேரத்தில் முல்லை பற்றிய உண்மை தெரியவர வேண்டாம் என கதிர் நினைக்கிறார். தற்போது கதிர் முல்லை காதல் காட்சிகள் அதிகமாக காட்டப்பட்டு வருகிறது. முதலில் விஜே சித்ரா முல்லையாக நடிக்கும் போது கதிர் முல்லை காதல் காட்சிகளுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தனர்.
கோபிக்கு எதிராக திரும்பிய ஈஸ்வரி, திகைத்து நின்ற பாக்கியா – ப்ரோமோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!
அதனை தொடர்ந்து காவ்யா அறிவுமணி நடிக்க தொடங்கியது முதல் காதல் காட்சிகள் அதிகமாக காட்டப்படவில்லை. அதன் பின் மீண்டும் பழையபடி காதல் காட்சிகள் காட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மீண்டும் முல்லை கதாபாத்திரம் மாற்றப்பட இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. முல்லையாக வேறு ஒரு நடிகை களமிறங்கி இருக்கிறார். அது குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.