விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் களமிறங்கிய புது முல்லை – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வரும் காவ்யா சீரியலில் இருந்து விலகிய நிலையில், அவருக்கு பதிலாக புது நடிகை ஒருவர் அறிமுகமாக இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல ஒரு கூட்டு குடும்பத்திற்கு எடுத்துக்காட்டாய் இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் நடித்து வருகின்றனர். சென்ற வாரம் முழுவதும் புது கடை திறப்பது குறித்து குடும்பமே சந்தோசமாக இருப்பது போல காட்டப்பட்டது. அதன் பின் தற்போது ஐஸ்வர்யா காலேஜ் போகமாட்டேன் என சொல்ல, தனத்திற்கு அது பிடிக்கவில்லை. அதனால் தனம் கோவமாக மூர்த்தியிடம் இது பற்றி புகார் சொல்கிறார்.
அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஹாப்பி நியூஸ் – மத்திய அரசின் செயலியின் அம்சங்கள்!
அடுத்து வரும் எபிசோடுகளில் இந்த பிரச்சனை பெரிதாக வாய்ப்பிருக்கிறது. இந்நிலையில் ஜீவா குடித்துவிட்டு செய்த ரகளை எல்லாம் ரசிகர்களை பெரிதும் ரசிக்க வைத்தது. மீனா ஜீவா ஜோடியால் தான் சீரியலில் நகைச்சுவை ட்ராக் வருகிறது. இந்நிலையில் முல்லைக்கு குழந்தை பிறக்காத விஷயத்தை கதிர் மறைத்து இருக்கிறார். அதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் முல்லை குழந்தையை எதிர்பார்ப்பார் என்பது போலவும் கதிர் அதை நினைத்து வருத்தப்பட இருப்பது போலவும் காட்டப்படும்.
உக்ரைன் அரசு கட்டிடத்தில் ஏற்றப்பட்ட ரஷ்ய தேசிய கொடி – நிலையை தீவிரமாக்கும் குண்டு மழை!
குடும்பமே ஒற்றுமையாக இருப்பதால் தான் பல குடும்ப ரசிகர்களை இந்த சீரியல் கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த சீரியலில் முல்லை கதாபாத்திரம் மாற்றபட இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. அது குறித்த எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருக்கிறது. அதில் முல்லையாக புது நடிகை ஒருவர் களமிறங்க இருக்கிறார். அதை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். இருந்தாலும் அன்றும் இன்றும் என்றும் முல்லையாக விஜே சித்ரா தான் இருப்பார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.