சமையல் போட்டியில் கலந்து கொள்ள லெட்டரை வாங்கும் முல்லை, மறுப்பு தெரிவிக்கும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

0
சமையல் போட்டியில் கலந்து கொள்ள லெட்டரை வாங்கும் முல்லை, மறுப்பு தெரிவிக்கும் கதிர் - இன்றைய
சமையல் போட்டியில் கலந்து கொள்ள லெட்டரை வாங்கும் முல்லை, மறுப்பு தெரிவிக்கும் கதிர் - இன்றைய "பாண்டியன் ஸ்டோர்ஸ்" எபிசோட்!
சமையல் போட்டியில் கலந்து கொள்ள லெட்டரை வாங்கும் முல்லை, மறுப்பு தெரிவிக்கும் கதிர் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனம், பாக்கியாவின் பிரச்சனையை பற்றி ஜீவாவிடம் சொல்கிறார். பின் கண்ணன் கொடைக்கானலில் சந்தோசமாக இருந்தது பற்றி மீனாவிடம் சொல்கிறார். மறுபக்கம் சமையல் போட்டிக்கு லெட்டர் வாங்கிய முல்லை மீது கதிர் கோபப்படுகிறார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், தனத்திடம் ஜீவா கொடைக்கானல் எப்படி இருந்தது என கேட்க, உடனே தனம் அங்கே யாரும் சந்தோசமாக இல்லை என சொல்லிவிட்டு கோபியின் இரண்டாவது கல்யாணம் பற்றி சொல்கிறார். அப்போது மீனா ஜீவாவை இப்படி எல்லாம் செய்யாதே என சொல்ல, தனம் அவனை ஏன் நீ சொல்கிறாய் என கேட்கிறார். மறுபக்கம் கண்ணன் கொடைக்கானலில் சந்தோசமாக இருந்தது பற்றி சொல்கிறார். மறுபுறம் மீனா எப்போதும் ஜீவா சீக்கிரமாக வருவான் ஆனால் நீங்க இல்லாத போது நேரமாக தான் வந்தான். ஒன்றுமே அவன் செய்யவில்லை, பேசாமல் நானும் உங்களுடன் வந்திருக்கலாம் என சொல்கிறார்.

கோபியிடம் கோவப்பட்டு பேசும் ராதிகா.. ஹோட்டலில் சாப்பாடு வாங்கி மாட்டிக் கொண்ட ஜெனி – இன்றைய “பாக்கியலட்சுமி” எபிசோட்!

Exams Daily Mobile App Download

மறுபக்கம் முல்லை வீட்டிற்கு பார்வதி வருகிறார். மூர்த்தி குடும்பத்துடன் கொடைக்கானல் போனதை பற்றி சொல்கிறார். அப்படியா என முல்லை கேட்க, நீங்க தான் அவர்களை நினைத்து கவலையில் இருக்கீங்க ஆனால் அவர்கள் அதுவும் நினைக்கவில்லை என சொல்கிறார். பின் முல்லைக்கு சமையல் போட்டி குறித்த போஸ்ட் வருகிறது. அதை பார்த்து முல்லை சந்தோசப்பட, என்ன லெட்டர் இது என கதிர் கேட்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

சமையல் போட்டியில் கலந்து கொள்ள சொல்லி லெட்டர் வந்திருப்பதாக சொல்ல, கதிர் நாம போறோம் என சொல்லவில்லையே என சொல்கிறார். உடனே முல்லை அமைதியாக இருக்க, கதிர் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பார்வதி என்ன விஷயம் என கேட்க, முல்லை விவரத்தை சொல்கிறார். உடனே பார்வதியும் வேண்டாம் என சொல்கிறார். பின் கதிர் அதெல்லாம் ஒன்றும் வேண்டாம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார். பின் முல்லை நீ சும்மாவே இருக்கமாட்டியா என பார்வதியை சத்தம் போடுகிறார். முல்லை எப்படியாவது கதிரை சம்மதிக்க வைக்க வேண்டும் என நினைக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!