விரைவில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லைக்கு வளைகாப்பு – இணையத்தில் வைரலாகும் ப்ரோமோ!
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் வீட்டின் 3வது மருமகளாக, கதிரின் மனைவியாக வரும் முல்லை கதாப்பாத்திரத்திற்கு வளைகாப்பு நடப்பது போல வெளியான ப்ரோமோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் :
தமிழ் சின்னத்திரை தொடர்களில் குடும்பப்பாங்கான கதைக்களம் கொண்ட முக்கிய சீரியல் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இது விஜய் டிவியில் பிரைம் நேரத்தில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. ஒரு கூட்டு குடும்பத்தில் நடைபெறும் வழக்கமான ஸ்வாரசியங்கள், சிறிய பிரச்சனைகள் என சாதாரணமான கதைக்களத்துடன் பார்ப்பவர்கள் முகம் சுழிக்காத வகையில் இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருவதால், இதற்கு ஆடியன்ஸ் அதிகம். இப்படி இருக்க ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலின் தற்போதைய கதைக்களம் பல்வேறு புதிய திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது.
கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோஹ்லி விலகியது ஏன்? சோயிப் அக்தர் பேட்டி!
அந்த வகையில் கூட்டு குடும்பத்தில் முதல் முறையாக மருமகள்களுக்கு இடையே நடைபெறும் போட்டிகள், சண்டைகள் என ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியல் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிறது. அதாவது, மீனா மற்றும் ஐஸ்வர்யாவுக்கு இடையே யார் பெரியவர் என்கிற ஒரு பனிப்போர் உருவாகி இருக்க, இதனால் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கூட்டு குடும்பத்தில் விரிசல் விழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். மறுபக்கத்தில் இந்த சீரியலில் மிகவும் கவனிக்கப்பட்டு வரும் ஒரு ஜோடியான கதிர், முல்லைக்கு குழந்தை பற்றிய பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்கிறது.
CBSE 10 & 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – முதல் கட்ட பொதுத்தேர்வு முடிவுகள்!
அதாவது, தனக்கு திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததை எண்ணி முல்லை வருந்த, கதிர் அவ்வப்போது இவரை சமாதானம் செய்து வருகிறார். இப்படி இருக்க தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் முல்லை கர்ப்பமாக இருப்பதாகவும், அவருக்கு வளைகாப்பு நடத்தப்பட இருப்பதாகவும் எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ ஒன்று வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இது தவிர முல்லையின் வளைகாப்பு காட்சிகளை எதிர்பார்த்து வரும் ரசிகர்களுக்கு இந்த ப்ரோமோ திரை விருந்தாக அமைந்திருக்கிறது என்றே கூறலாம்.