“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் அடுத்து வரப்போகும் ட்விஸ்ட் – முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் குடும்பத்தினர்!
விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ், முல்லைக்கு குழந்தை பிறக்காது என டாக்டர் சொல்லிவிட்டார். இதனால் முல்லை செயற்கை முறையில் கர்ப்பம் ஆவதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்ள குடும்பமே முடிவு எடுத்து உள்ளது. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக முல்லை கர்ப்பமாகியுள்ளார். இதனால் முல்லைக்கு வளைகாப்பு நடத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
வைரலாகும் வீடியோ:
சீரியல் என்றாலே அது குடும்பங்கள் சேர்ந்து பார்ப்பது தான். இங்கு ஒரு குடும்பத்தை வைத்து தான் மொத்த சீரியலுமே என்ற ரேஞ்சில் செல்வது தான் விஜய் டிவி பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல். இந்த சீரியலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் வாரம் வாரம் ஏதாவது ட்விஸ்ட் கொடுக்க வேண்டும் என்பதில் இயக்குனர் தெளிவாக இருப்பார். அந்த வகையில் ஒரு மளிகை கடை வைத்திருந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் இப்போ ஒரு சூப்பர் மார்க்கெட் கட்டிவிட்டார்கள். இந்த கட்டிடம் கட்டும்போதே பல பிரச்சினைகள் வந்தது. ஆனாலும் சமாளித்து ஒரு வழியாக கட்டி முடித்துவிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரதர்ஸ் சந்தோசமாக இருந்தனர்.
விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தனத்தின் சமையல் திறனை கண்டு வியந்த ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ!
இதை தொடர்ந்து முல்லை – கதிர் குழந்தை பிரச்சனை தான் மிகப் பெரிய திருப்பமாக இருந்து வருகிறது. இந்த சீரியலில் முல்லை- கதிர் ஜோடி ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் ஜோடி ஆகும். இந்த ஜோடிக்கு என்று தனியாக பல ரசிகர்கள் உள்ளனர். முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ராவின் மறைவிற்கு பிறகு, இந்த முல்லை கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார். இந்நிலையில் முல்லைக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்ற ஆசை. ஆனால் முல்லைக்கு தான் பிரச்சனை என்று டாக்டர் சொல்லி விடுகிறார். ஆனால் இதை முல்லையிடம் சொல்லாமல் கதிர் மறைத்து விடுகிறார். இருப்பினும் தனக்கு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதை அறிந்த முல்லை மருத்துவமனைக்கு சென்று உண்மையை தெரிந்து கொள்கிறார். அதனால் மனம் உடைந்து போன முல்லை கதிருக்கு நான் வேண்டாம் என சொல்லி வீட்டை விட்டு வெளியே போகிறார்.
இதனால் கதிர் முல்லையை காணாமல் தேடி அலைவார், பின்பு ஊர் எல்லையில் அவர் இருக்கிறார். அவரிடம் வீட்டுக்கு போவோம் என சொல்ல ஆனால் முல்லை எனக்கு குழந்தை பிறக்காது அதனால் நான் வேண்டாம் என சொல்கிறார். என்னை பற்றி ஏன் நினைக்கவில்லை என பேசி வீட்டிற்கு அழைத்து செல்கிறார். முல்லைக்கு அனைவரும் ஆறுதல் சொல்லி செயற்கை கருத்தரிப்பு செய்யலாம் என முடிவு செய்கின்றனர். இருந்தாலும் அதற்கு அதிகமாக செலவாகும் என்பதால் கொஞ்ச நாளைக்கு வீடு கட்டும் பிளானை நிறுத்தி வைக்கலாம் என்று முடிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் தற்போது முல்லை கர்ப்பமாகி உள்ளதாகவும், முல்லைக்கு குடும்பமே வளைகாப்பு விழா நடத்த உள்ளதாகவும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.