‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர் குமரனின் நெகிழ்ச்சியான பதிவு – உருகும் ரசிகர்கள்!
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் அதிக அளவில் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்த குமரன் தற்போது தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ அதிக அளவில் வைரலாகி வருகிறது.
நெகிழ்ச்சியில் குமரன்:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பல நடிகர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு முன்னதாக பல வருடங்களாக சின்னத்திரையில் நடித்து வந்த பலரும் அடையாளம் காட்டும் அளவிற்கு அதிக புகழை அடையாத நிலையில் தான் இருந்தனர். ஆனால் கடந்த 4 வருடங்களாக நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் உள்ள கதாபாத்திரத்தின் மூலம் மக்களின் மனதில் தனி இடத்தை பிடித்து உள்ளனர். அந்த வகையில், கதிர் வேடத்தில் நடித்து வரும் குமரன் குறிப்பிடத்தக்க மாற்றத்தை அடைந்தவர்.
விஜய் டிவி ‘பாக்கியலட்சுமி’ சீரியல் கோபிக்கு ஏற்பட்ட பரிதாபம் – குவியும் மீம்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
விஜய் டிவியின் நடன நிகழ்ச்சிகளில் குரூப் டான்சராக இருந்தவர். தற்போது அனைவரும் விரும்பும் கதிர் ஆக மாறியுள்ளார். இந்த சீரியலில் மிகவும் அமைதியான ஆனால் முரட்டுத்தனமான வேடத்தில் நடிக்கிறார். அடிக்கடி தனது இன்ஸ்டாவில் பாடல்களை பாடியும், நடனம் ஆடியும் வீடியோ வெளியிட்டு வருவார். தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோவில் மக்களிடம் பேசுவது போல் உள்ளது. இதில் அவர் கூறியுள்ளது அனைவரையும் நெகிழவைக்கும் வகையில் உள்ளது.
விரைவில் முடிவுக்கு வரும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல்? வில்லி வெண்பா விளக்கம்! ரசிகர்கள் ஷாக்!
அதில், தான் சிறு வயது முதல் தற்போது வரை ஏறியுள்ள மேடைகளிலும், போட்டிகளிலும் தொற்று போனாலும் கவலை அடைவதில்லை என்றும், மக்களின் மனதில் நிற்பது தான் தனது ஆசை என்றும், அதை தான் சரியாக செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதாவது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் கடை திறப்பு விழா ஷூட்டிங்கின் போது அதிக கூட்டம் இருந்தது. அப்போது கதிரை பார்த்த ரசிகர்கள் அவரை நோக்கி சூழ தொடங்கியுள்ளனர். இதற்காக தான் வருத்தப்படவில்லை என்றும், சந்தோசம் தான் என்றும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.